முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்தோலியாவுக்கு ஜாமீன் உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, டிச.9 - ஆ. ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியாவுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. சந்தோலியாவுக்கு ஜாமீன் வழங்கி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 1 ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சந்தோலியா விடுவிக்கப்பட்ட செய்தியை அறிந்த டெல்லி ஐகோர்ட் இதை தன்னிச்சையாக எடுத்துக் கொண்டு விசாரித்து சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக கடந்த 2 ம் தேதி உத்தரவிட்டது. ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சந்தோலியா சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அல்தமஸ் முன்னிலையில் நடைபெற்றது. 2 ஜி விவகாரம் தொடர்பாக நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. எனவே சந்தோலியாவின் மனு குறித்து நீதிபதி சிங்வி தலைமையிலான அமர்வே விசாரிக்க வேண்டும் என்று கருதுகிறோம். அதுவரை டெல்லி ஐகோர்ட் விதித்த இடைக்கால தடை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று நீதிபதி கபீர் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்