முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள வணிக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.9 - முல்லை பெரியாறு விவகாரத்தில் தாக்குதல் நடைபெறாவண்ணம் கேரள வணிக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கேரள எல்லையில் பெரும் பதட்டம் காணப்படுகிறது. கேரளாவில் சில வணிக நிறுவனங்கள் தமிழர்களின் கடைகள் தாக்கப்பட்டன.  சபரிமலை செல்லும் பக்தர்களும் தாக்கப்பட்டனர்.

இதையொட்டி தமிழகத்திலும் சில இடங்களில் கேரள வணிக நிறுவனங்கள் ஹோட்டல்கள் தாக்கப்பட்டது. கேரள மக்கள் அமைதிகாக்குமாறும் பதட்ட பட வேண்டாம் என்றும் முதல்வர் ஜெயலலிதா கேட்டு கொண்டார்.

தமிழகம் முழுவதும் கேரள வணிக நிறுவனங்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட கூடாது என்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையிலும் கேரள வணிக நிறுவனங்கள் உள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தி.நகரிலுள்ள ஜோ அலுக்காஸ், ஜாஸ் அலுக்காஸ் ஆகிய நகை கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்