முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு உம்மன்சாண்டி மீண்டும் கடிதம்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், டிச.9 - முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அணையின் பாதுகாப்பையும், அணை அமைந்துள்ள பகுதியில் அமைதியையும் உறுதி செய்ய காவல் துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கேரள அரசு எடுத்துள்ளது என்று அந்த கடிதத்தில் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார். மேலும் வரும் 16 ம் தேதி நடக்கவுள்ள அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை இரு தரப்பும் அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி கொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் பெரிய அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டால் அதை அணை தாங்காது. அணை உடைந்தால் ஏற்படும் பெருத்த சேதத்திற்கு இரு தரப்புமே பொறுப்பேற்க வேண்டி வரும். எனவே புதிய அணை கட்டுவதே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும் தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்