முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு பிரச்சினை: தி.மு.க. செயற்குழு கூடுகிறது

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.9 - முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக தி.மு.க. தலைமை செயற்குழுவின் அவசர கூட்டம் இன்று 9 ம் தேதி நடைபெறும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைமை செயற்குழுவின் அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கருணாநிதி தலைமையில் நடைபெறும். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். எனவே தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசையும், கேரள அரசையும் கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்