எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மார்ச்.- 13 - கடுமையான விலைவாசி உயர்வு, தி.மு.க.வின் ரூ. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்கள், கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் இவற்றின் காரணமாக மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதால் அ.தி.மு.க. கூட்டணிவரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாகை சூடும் என்று தனது கருத்துக் கணிப்பின் மூலம் வெளியிட்டிருக்கிறது இந்திய வாக்காளர் பேரவை. இந்த பேரவை கோவையை மையமாக வைத்து இயங்கி வரும் ஒரு அமைப்பு ஆகும்.
கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்தித்த இன்னல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அவை ஓராயிரம் என்று சொல்லலாம். தொடர்ந்து 5 ஆண்டுகளாக இடைவிடாத மின்வெட்டை அமுல்படுத்தி மக்களை வாட்டி வதைத்தது. உப்பு முதல் உளுந்து வரை அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, செங்கல், சிமிண்ட், மணல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களின் தாறுமாறான விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது, பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கத் தவறியது இவையெல்லாம் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரேசன் அரிசி கடத்தல், மணல் கடத்தல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்றவற்றாலும் தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இவை தவிர, அன்றாடம் நடக்கும் கொலைகள், கொள்ளைகள் இவற்றாலும் மக்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் அடுத்த மாதம் 13 ம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தே.மு.தி.க. போன்ற முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணி 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூடும் என்று இந்திய வாக்காளர் பேரவை தெரிவித்துள்ளது. கோவையை மையமாக வைத்து இயங்கி வரும் இந்த அமைப்பில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2004 ல் நடந்த தேர்தலில் இந்திய அளவில் ஒரு மெகா சர்வே நடத்தி சோனியா காந்தி தலைமையில் இடதுசாரிகள் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என்ற கருத்துக் கணிப்பை இந்த அமைப்புதான் வெளியிட்டது. அதற்கடுத்து 2006 சட்டமன்ற தேர்தலின் போது இழுபறியான சீட்டுக்களை பெற்று தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சிதான் ஏற்படும் என்ற சர்வேயையும் இந்த அமைப்புதான் வெளியிட்டது.
தற்போதும் இந்த அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. கடந்த 5 ஆண்டுகளில் கருணாநிதி அரசு பற்றி வெளிவந்த விமர்சனங்கள் பலவற்றை கேள்விகளாக தொகுத்து அவற்றுக்கு மக்களிடம் பதில்களை இந்த அமைப்பு பெற்றுள்ளது. முதல் கேள்வியாக, தமிழ்நாட்டில் நடக்கும் தி.மு.க. ஆட்சி நல்லாட்சி என்று நினைக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு வெறும் 5 சதவீதம் பேர் ஆம் என்றும் 95 சதவீதம் பேர் இல்லை என்றும் பதிலளித்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்தினரின் கையில் ஆட்சி இருப்பதை விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை என்று 90 சதவீதம் பேரும், ஆமாம் என்று 10 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர்.
ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி வழங்குவது, கடத்தல் வியாபாரிகளுக்குத்தான் அதிக பயனுள்ளதாக மக்கள் கருதுகிறார்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என்று 80 சதவீதம் பேரும், இல்லை என்று 20 சதவீதம் பேரும் குறிப்பிட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சியே வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 98 சதவீதம் பேர் இல்லை என்றே கருத்து கூறியிருக்கிறார்கள். மொத்தமுள்ள 25 கேள்விகளில் 22 கேள்விகளுக்கு தி.மு.க. ஆட்சிக்கு எதிரான கருத்துக்களையே 93.40 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.
நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்று மக்கள் நினைக்கிறார்களா? தி.மு.க. ஆட்சி கூடாது என்று விரும்புவோர் ஓரணியில் திரள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களா? என்பது போன்ற கேள்விகளுக்கும் ஆம் என்றே 100 க்கு நூறு சதவீதம் பேர் தங்கள் பதிலை டிக் அடித்திருக்கிறார்கள். இவர்களது சர்வேயின்படி கடுமையான விலைவாசி உயர்வு, ஆ. ராசா மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு, கருணாநிதி குடும்பத்தின் அதிகார ஆதிக்கம் ஆகியவை தமிழக மக்களிடம் கடுமையான வெறுப்பை ஏற்படுத்தியிருப்பது தெளிவாக தெரிகிறது.
இலவச கலர் டி.வி பற்றி கேட்ட போது, கேபிள் இணைப்பை இலவசமாக கொடுக்கவில்லையே என்று மக்கள் கிண்டலாக பதிலளித்தார்களாம். இந்த முறையும் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்களே... என்று கேட்ட போது கொடுக்கட்டும், யார் வீட்டு பணம். எங்கள் பணம்தானே. பணத்தை வாங்கிக் கொண்டு மாற்றிப் போடுவோம் என்று மக்கள் பதிலளித்தார்களாம். மக்களின் இந்த பதில் மூலம் ஆய்வு செய்த போது 234 தொகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் கைப்பற்றும் என்று தெரிகிறது என இந்திய வாக்காளர் பேரவை தெரிவித்துள்ளது. இந்த சர்வே கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.