எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.- 12 - முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக்கொடுக்காது என்ற நிலையை வலியுறுத்துவதற்காக சிறப்பு சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் 15-ம் தேதி கூட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். முல்லைப்பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் விஸ்வரூபமெடுத்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதலில் 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பின்னர் அணையை வலுப்படுத்தும் பணியை தமிழகம் மேற்கொண்ட பின்னர் மத்திய நீர் ஆணையம் திருப்தியடைந்ததும் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளவும் உச்சநீதிமன்றம் கடந்த 2006-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால் கேரள அரசோ இந்த ஆணையை முடக்கும் வகையில் அப்போதிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சினையின் விளைவாக கேரள அரசின் 2006-ம் ஆண்டின் சட்டதிருத்தம் செல்லத்தக்கதா என்பது உட்பட சட்டம் மற்றும் அரசமைப்பு ரீதியான விஷயங்களை தவிர ஏணையவற்றை பரிசீலிக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனந்த தலைமையில் அதிகாரம் படைத்த குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நிறுவியது. அந்த குழு தனது விசாரணையை ஏறக்குறைய முடித்துவிட்டு உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கையை தரக்கூடிய நிலையில் கேரள அரசு தன் பழைய நிலையான புதிய அணையை கட்டும் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்ததுடன் சமீபத்தில் அம்மாநில சட்டமன்றத்தில் அதற்கான தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளது. அதோடு முல்லைப்பெரியாறு அணையின் பகுதி நிலநடுக்க பிராந்தியமாக இருப்பதாகவும், அதனால் அணைக்கு புதிய ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், அது இடிந்து விட்டால் பலரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் வீணான வதந்திகளை கேரள அரசு பரப்பி வருகிறது. இதனால் அணையின் கேரள பகுதியில் மேலும் பதட்டம் ஏற்பட்டது. பலர் அதை இடிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். இதையொட்டி முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய படையை அப்பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். மேலும் சமீபத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழலில் கேரளம்- தமிழகம் நலன் கருதி எந்தஒரு பிரிவினை சக்திக்கும் இடம் தரக் கூடாது என்றும் முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதையொட்டி நேற்று முன்தினம் கூடலூர் பகுதியில் எல்லைச் சாவடிகளை கேரளா மூடியது. எல்லைச் சாவடி பகுதிகளுக்குள் தமிழகத்திலிருந்து பொதுமக்கள் நுழைந்தால் கண்டதும் சுடவும் கேரள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் கேரளாவிற்குள் நுழையும் நடவடிக்கையில் இறங்கினர். அவர்களை தேனி மாவட்ட ஆட்சியரும், போலீசாரும் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர். முல்லைப்பெரியாறு பகுதியில் உள்ள பதற்றத்தால் கடந்த 7 நாட்களாக நின்றிருந்த வாகன போக்குவரத்தை சீர்படுத்தவும், போதிய போலீஸ் பந்தோபஸ்து அளிக்கவும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் நடவடிக்கை எடுத்துள்ளார்.கேரள மாநில அரசு இப்படி பீதியையும், பதற்றத்தையும் உருவாக்கும் நடவடிக்கைகளில் இறங்கினாலும் தமிழக தரப்பில் மிகவும் பொறுமை காத்ததுடன் கொந்தளித்துள்ள பொதுமக்களை சமாதானப்படுத்தி அமைதி காத்திடும் முயற்சியில் முதல்வர் ஜெயலலிதாவும், உயர் அதிகாரிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில் தமிழக உரிமைக்காக உள்ளனர் என்பதை எடுத்துக் காட்ட சிறப்பு சட்டமன்றத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முல்லைப் பெரியாறு பிரச்சனை தற்சமயம் உச்சநீnullதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீnullதிமன்றத்திற்குத் தேவையான முக்கிய தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான புள்ளிவிவரங்கள் கொடுத்து, நம் பக்கம் உள்ள நியாயத்தை உச்சnullநீதிமன்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்வதால் தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு நம்புகிறது. அதன் விளைவாக, எப்பொழுதும் உணர்ச்சிகளைத் தவிர்த்து, நியாயமாக நடந்து கொள்ளும்படி நான் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறேன். நான் உங்களில் ஒருத்தியாக உங்களின் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறேன். நமது நாட்டிற்கும், எனது மக்களுக்கும் அமைதியும் வளமும் கிடைக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனது அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களை இந்த பிரச்சனை குறித்து உணர்ச்சிவசப்படாமல் இருக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் வன்முறையிலும், வெறுப்பிலும் நம்பிக்கையற்றவர்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்துவோம். இம்மாநிலத்தில் ஒரு சில நபர்களுக்கு மட்டுமோ அல்லது யாருக்கேனும் பாதிப்பு இருந்தால், நானும் எனது தலைமையிலான தமிழக அரசும் உடனடியாக உதவிக் கரம் நீnullட்டி நடவடிக்கை எடுப்பதில் முதலாவதாக இருப்போம். இப்பிரச்சனையில், எனக்கும் தமிழக மக்களுக்கும், கேரள அரசு மற்றும் கேரள மக்களின் மீது எந்தவித விரோதமும் இல்லை. கேரள மக்களுக்கும், எங்களுக்கும் எந்தவித சச்சரவும் இல்லை. எனவே, அவர்களின் உடமைகளுக்கு சேதம் உண்டாக்குவதும் அல்லது அவர்களை துன்புறுத்துவதும், அதன்மூலம் நமக்கு நாமே பாதிப்பு ஏற்படுத்துவதும் இப்பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. இப்பிரச்சனையை விஞ்ஞான ரீதியாகவும், தர்க்கnullர்வமான முறையிலும் கையாள உங்களது அரசை அனுமதிக்க வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இச்சூழ்நிலையில், இந்த பிரச்சனையை மேலும் சிக்கலாக்காமல் உடனே கலைந்து செல்லும்படி மாநில எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினையில் தமிழக மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிலைநாட்டும் வகையில், 15.12.2011 அன்று காலை 11.00 மணிக்கு ஒரு சிறப்பு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் கூட்டப்படும். இந்தக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று தவறாக பரப்பப்படும் பீதியின் அடிப்படையில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.