முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

புதன்கிழமை, 14 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, டிச.14 - கபாலீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மைலாப்பூர் கபாலீசுவர் கோவிலுக்கு சொந்தமான 5 கிரவுண்ட் நிலம் ராஜா அண்ணாமலைபுரம் பக்ஸ்ப் ரோட்டில் உள்ளது. இந்த இடத்தை லட்சுமி பிலிம்ஸ் கம்ஸன்ஸ் என்ற நிறுவனத்துக்கு மாத வாடகைக்கு 1958-ல் கொடுத்தனர். இதில் அனுராதாதேவி என்பவர் வசித்து வந்தார். இங்கு படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் மாத வாடகை செலுத்தாததால் நிலத்தை கையகப்படுத்த கோவில் நிர்வாகம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த இடத்தில் இருப்பவர்களை வெளியேற்றி இடத்தை கையகப்படுத்த கோவிலுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கோவில் துணை ஆணையர் பரஞ்சோதி தலைமையில் அதிகாரிகள் நிலத்தை கைப்பற்றினார்கள். அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியேற்றினார்கள்.

மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.25 கோடி இருக்கும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்