எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,டிச.15 - மதுரை அண்ணாநகரில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தை கருமுத்து கண்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். சமீபகாலத்தில் இந்தியாவில் நீரிழிவு நோய் மிக வேகமாக பரவுகிறது என்பது கண்கூடான ஒன்றாகும். 2011 -ல் 62 மில்லியனாக இருந்த இந்த எண்ணிக்கை வரும் 2025 ம்ஆண்டில் 100 மில்லியனாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக 50 சதவீதம் மக்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு குறைபாடு உள்ளது என்பது தெரியாமலேயே உள்ளார்கள். குழந்தைகள்கூட இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1991 -ம் ஆண்டு சென்னை, கோபாலபுரத்தில் துவக்கப்பட்ட டாக்டர் .மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் உலகத் தரம்மிக்க நீரிழிவிற்கான சிகிச்சையை வழங்கி வருகின்றது. உலக அளவிற்கு நன்கு புகழ்பெற்ற நீரிழிவு சிகிச்சை நிபுணரும், இம்மையத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் வி.மோகன் மற்றும் அனைவராலும் நன்கு அறிந்த கண் மருத்துவர் அவரது காலஞ்சென்ற மனைவி டாக்டர் ரெமா மோகன் ஆகிய இருவராலும் இம்மையம் துவங்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் வெற்றிகரமாக வளர்ச்சியடைந்து கடந்த 20 ஆண்டுகளில் 2,60,000-ற்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு இம்மையம் சிசிச்சையளித்துள்ளது. இது உலகிலேயே விரைவான வளர்ச்சியுடன் செயல்பட்டு வரும் ஒரு நீரிழிவு சிகிச்சை மையமாகும். டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் கிளைகள் சென்னை, வேலூர், காஞ்சிபுரம் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மதுரை அண்ணாநகரில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் நேற்று திறக்கப்பட்டது. இதன் திறப்புவிழா நேற்று மாலை மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள பார்ச்சூன் பாண்டியன் ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் பி.நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். விழாவிற்கு வந்திருந்தோர் அனைவரையும் மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மோகன் வரவேற்றுப் பேசினார். இந்த விழாவில் மதுரை தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கருமுத்து தி.கண்ணன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தை துவக்கிவைத்தார். விழாவில் கலந்துகொண்ட டாக்டர் ஆர்தர் ஜோசப் ஆசீர்வாதத்திற்கு வாழ்நாள் சாதனையாளருக்கான சிறப்பு விருதும், சான்றிதழும் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இதேபோல் டாக்டர் ஜி.சந்திரமோகனுக்கு நீரிழிவுத்துறையில் சிறந்த பணியாற்றியதற்காக கெளரவ விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மையத்தின் துணைத் தலைவர் தணிகைமணி, மையத்தின் உதவி நிர்வாக இயக்குனர் டாக்டர் அஞ்சனா, உபதலைவர் டாக்டர் ரஞ்சித் உன்னிக்கிருஷ்ணன், டாக்டர்கள் எஸ்.ரவிக்குமார், ஏ.கண்ணன், வி.என்.ராஜசேகரன், முதன்மை நிர்வாக அலுவலர் ரேகா தங்கப்பன், மையத்தின் துணை பொது மேலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் வி.மோகன் பேசுகையில், நீரிழிவு நோய்க்காக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை கொடுக்கும் வகையில் எங்களது மையம் செயல்பட்டு வருகிறது. நீரிழிவு சிகிச்சைக்கான வசதிகள் அனைத்தும் நியாயமான செலவில் எங்களது மையத்தில் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் அடிப்படையில் 2.7 லட்சத்திற்கும் மேலான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது கிடைத்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் 3 லட்சம் மக்கள் மதுரை மாவட்டத்தில் நீரிழிவு நோயோடு இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. மதுரையில் எங்களது நீரிழிவு மையத்தில் எக்ஸ்ரே, இ.சி.ஜி. அதிநவீன வசதிகளுடனான ஆய்வுக்கூடம், உணவு ஊட்டச்சத்துத்துறை, நீரிழிவு உடல்நல சிறப்பு சமையல்கூடம், உணவு விடுதி, நோயாளிகளுக்கு கல்வி பயிற்சித்துறை போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி உள்ளது. எனவே எங்கள் மையத்தில் சிறப்பான முதன்மையான சிகிச்சை நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.