முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த நடவடிக்கை: இல.கணேசன்

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,டிச.15 - முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பிரதமர் மன்மோகன்சிங் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சிதலைவர் இல.கணேசன் மதுரையில் தெரிவித்தார்.  

இது குறித்து அவர் மதுரையில் அளித்த பேட்டியில் கூறியதாவது,   தேசிய கட்சிகள் மாநில பிரச்சினையில் தலையிடுவது இல்லை என கூறிவருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. தேசிய கட்சிகளுக்கும் மாநில பிரச்சினையில் அக்கறை உள்ளது. அதனால் தான் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள மக்களின் கருத்தோடு அந்தமாநில பாரதீய ஜனதாவும், ஒத்த கருத்தோடு உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டிலும் தமிழக மக்களின் கருத்தோடு தமிழக பாரதீய ஜனதாவும் ஒத்த கருத்தோடு உள்ளது. எனவே முல்லை பெரியாறு அணை பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு முன்வர வேண்டும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காவிரி பிரச்சினையில் பதட்டம் நிலவியது. அப்போது இருமாநில முதல்வர்களையும் அழைத்து பேசி சுமூக நிலையை ஏற்படுத்தினார். ஆனால் இப்போது உள்ள பிரதமருக்கு அந்த துணிச்சல் இல்லை. 

முல்லை பெரியாறு பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதும், தமிழகத்தில் கேரளத்தவர்களும் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்