முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் டெஸ்ட்: இலங்கை முதல் இன்னிங்சில் 180 ரன்

வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

செஞ்சுரியன்,டிச. 16 - தெ.ஆ.வுக்கு எதிராக செஞ்சுரியன் நகரில் நடைபெற்று வரும் முதலா வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங் சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 180 ரன்னில் சுருண்டது. தெ.ஆ. அணி தரப்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான பிளாண்டர் மற்றும் ஸ்டெயின் இருவரும் சிறப்பாக பந்து வீசி முக்கிய விக் கெட்டுகளை கைப்பற்றினர். அவர்களது பந்து வீச்சால் இலங்கை வீரர் கள் நிலைகுலைந்து போனார்கள். இலங்கை அணி கேப்டன் தில்ஷான் தலைமையில் தென் ஆப்பிரிக்கா வில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் கிரீம் ஸ்மித் தலைமை யிலான அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் போட்டி செஞ்சுரியன் நகரில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று துவங்கியது. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற தெ.ஆ. அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இலங்கை அணியால் தெ. ஆ. பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியவில்லை. 

இலங்கை அணி இறுதியில் 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 180 ரன்னை எடுத்தது. அந்த அணி தரப்பில் ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. ஆனால் 4 வீரர்கள் கால் சதம் அடித்த னர். 

ஆல்ரவுண்டர் மேத்யூஸ் அதிகபட்சமாக, 52 பந்தில் 38 ரன்னை எடுத் தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். தவிர, பரணவிதானா 32 ரன்னையு ம், ஜெயவர்த்தனே 30 ரன்னையும், சமரவீரா 36 ரன்னையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

இலங்கை அணியின் ஸ்கோர் 11 - ல் தில்ஷானும், 12 - ல் சங்கக்கராவு ம் அவுட்டானார்கள். பரணவிதானாவும், ஜெயவர்த்தனேவும் இணைந்து 3 -வது விக்கெட்டிற்கு 54 ரன் எடுத்தனர். ஜெயவர்த்தனேவும், மே த்யூசும் இணைந்து 5 - வது விக்கெட்டிற்கு 65 ரன் எடுத்தனர். 

தெ.ஆ. அணி சார்பில் வேகப் பந்து வீச்சாளரான பிளாண்டர் அபார மாக பந்து வீசினார். அவர் 53 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத் தார். ஸ்டெயின் 18 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, இம்ரான் டாகிர் 1 விக்கெட் எடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்