முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சினுக்கு பாரத ரத்னா விருது மும்பை கிரிக்கெட் சங்கம் தீர்மானம்

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

மும்பை, டிச. - 19 - இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வலியுறுத்தி மும்பை கிரிக்கெட் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. கலை, இலக்கியம், அறிவியல், பொதுசேவை ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை செய்தவர்களுக்கு மட்டுமே இது வரை பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மற்ற துறைகளில் சிறப்பாக செயல்படுவோருக்கும், இந்த விருதை வழங்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து இப்போது சச்சினுக்கு இந்த விருதை வழங்க வலியுறுத்தி அதற்கு ஆதரவாக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது மும்பை கிரிக்கெட் சங்கம். இது குறித்து சங்கத்தின் துணை தலைவர் ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், சச்சினுக்கு பாரத ரத்னா விருதை வழங்க வலியுறுத்தி எங்கள் சங்கத்தின் நிர்வாகிகள் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எங்களின் தீர்மானத்தை மத்திய அரசிடம் எடுத்து செல்லக்கோரி மகராஷ்டிரா அரசுக்கு எங்களின் இணை செயலர்கள் நிதின் தலால், ஷெட்டி ஆகியோர் கடிதம் எழுதவுள்ளனர் என்றார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 99 சதங்கள் அடித்துள்ள சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதை போல ஒலிம்பிக்கில்  தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் விளையாடிய மேஜர் தயான்சந்துக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்