முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் சர்மாவுடன் போட்டி இல்லை விராட் கோக்லி மனம் திறந்த பேட்டி

புதன்கிழமை, 21 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

கான்பெரா, டிச. - 21  -  ரோகித் சர்மாவுடன் போட்டி இல்லை என்று இந்திய அணியின் மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விராட் கோக்லி தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு -  இந்திய டெஸ்ட் அணியில் 6 - வது வீரர் இடம் இன்னும் காலியாகவே உள்ளது. சேவாக், காம்பீர் தொடக்க வீரர்களாக ஆடுகிறார்கள். டிரா விட் 3 -வது வீரராகவும், டெண்டுல்கர் 4 -வது வீரராகவும், லட்சுமண் 5 -வது வீரராகவும் அதற்கு அடுத்த நிலையில் ஆடுகிறார்கள்.  கேப்டன் தோனி 7 -வது வீரராக ஆடுகிறார். கடைசி 4 நிலையில் பெளலர்கள் இடம் பெறுவார்கள். கங்குலிக்கு பிறகு, 6-வது வீரருக்கான இடத்தில் நிரந்தரமாக யாரும் இடம் பெறவில்லை. யுவராஜ் சிங், ரெ ய்னா அந்த இடத்தில் வந்து போனார்கள். தற்போது ஆஸ்திரேலிய பயணத்துக்கான அணியில் அந்த இருவருமே இல்லை. விராட் கோக்லியும், ரோகித் சர்மவும் இடம் பெற்று உள்ள  னர். இதில் கோக்லி 4 டெஸ்டில் விளையாடி இருக்கிறார். ரோகித் சர் மா இது போல டெஸ்டில் விளையாடவில்லை.  பயிற்சி ஆட்டத்தில் இருவருமே சிறப்பாக விளையாடி வருவதால் அணியில் இடம் பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது. முதல் பயிற் சி ஆட்டத்தில் ரோகித் சர்மா 56 ரன் எடுத்தார். ஆனால் கோக்லி 1 ரன் னே எடுத்தார்.  தற்போது, நடைபெற்று வரும் 2-வது பயிற்சி ஆட்டத்தில் கோக்லி சத ம் அடித்து முத்திரை பதித்தார். ரோகித் சர்மா 47 ரன் எடுத்தார். இத னால் வருகிற 26 -ம் தேதி மெல்போர்னில் தொடங்கும் முதல் டெஸ் டில் யார் இடம் பெறுவார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.  இந்த நிலையில் தனக்கும், ரோகித் சர்மாவுக்கும் அணியில் இடம் பெ றுவது தொடர்பாக எந்தவித போட்டியும் இல்லை என்று விராட் கோக்லி கூறியுள்ளார். 2 -வது பயிற்சி ஆட்டத்துக்கு பிறகு, அவர் நிரு பர்களிடம் கூறியதாவது -  எதிர்காலத்தில் இந்திய அணிக்காக விளையாடுவோம் என்பது எங்க ளுக்கு தெரியும். ஆனால் இதற்காக எங்களுக்குள் எந்த விதமான போட்டியும் இல்லை. அணியில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடிக்க  எப்போதுமே போட்டி நிலவும். 2 அல்லது 3 நல்ல வீரர்கள் இருந்தால் அந்த இடத்தை பிடிக்க காத்திரு க்க வேண்டும். நானும், ரோகித் சர்மாவும் இணைந்து நிலைத்து ஆட வேண்டும். எதிர்கால இந்திய அணிக்கு இது சிறப்பாக அமையும். இவ்வாறு கோக்லி கூறினார். ஆஸ்திரேலிய லெவன் அணிக்கும், இந்திய அணிக்கும் இடையே தற் போது 2 -வது பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் விராட் கோக்லி 4-வது வீரராகவும், ரோகித் சர்மா 5 - வது வீரராகவும் இறங் கினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்