முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி அருகே சுமார் 1000 பேர் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

போடி டிச.- 20 - முல்லைப்பெரியார் அணையை பாதுகாக்கவும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீர் மட்டத்தை உயர்த்திடவும், மத்திய அரசு தலையிட்டு உடனடியாக தீர்த்தக்கொடுக்க வேண்டுமென்றும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட வேண்டுமென்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 

தேனிமாவட்டம், போடிநாயக்கனுனூர் அருகே உள்ள கீழசொக்கநாதபுரம், சுந்தரராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என கிராம மக்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதில் வீட்டு பிராணியான நாயும் தனது எஜமானுடன் உண்ணாவிரத்தில் கலந்து கொண்டது அவ்வழியே செல்லும் மக்களை திரும்பி பார்க்கச்செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்