முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனநீர் இன்று திறப்பு-ஜெயலலிதா உத்தரவு

புதன்கிழமை, 21 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.- 21 - திருநெல்வேலி மாவட்ட மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று (21.12.11)  தண்ணீர் திறந்துவிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள 12,018 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்