முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தூர் ராமச்சந்திரன் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச. - 22 - முன்னாள் தி.மு.க. அமைச்சர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு சொந்தமான 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். தி.மு.க. ஆட்சியில் முதலில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பின்னர் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சாத்தூர் ராமச்சந்திரன். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இவருக்கு விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் நூற்பு மில்லும், விருதுநகரில் சினிமா தியேட்டர் ஒன்றும் உள்ளது. இது தவிர வேறு பல தொழில்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில் சாத்தூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இது தொடர்பாக சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முதல்கட்ட விசாரணை நடந்தது. புகார்களுக்கு ஆதாரம் இருப்பதாக தெரிந்ததை தொடர்ந்து  விருதுநகர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, பல பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தது. அதன் அடிப்படையில் அவரது வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று காலை 6.30 மணிக்கு விருதுநகரில் உள்ள சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டில்  திருச்சி  லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையிலான போலீஸ் படையினர் அதிரடியாக புகுந்து திடீர் சோதனை நடத்தினர். அப்போது சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டில் இருந்தார். கதவுகளை உள்பக்கமாக nullட்டிக் கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோல விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள சினிமா தியேட்டர், முத்தால் நகரில் உள்ள நூற்புமில், அருப்புக்கோட்டை கோபாலபுரம் பகுதியில் உள்ள நூற்பு மில், அருப்புக்கோட்டையில் உள்ள கதிர் சில்க்ஸ் ஜவுளிக்கடை,  ஸ்பின்னிங் மில் மற்றும் இரண்டாவது மகன் ரமேஷ் வீடு மற்றும் சாத்தூர் ராமச்சந்திரனின் உறவினரான முன்னாள் யூனியன் சேர்மன் சுப்பாராஜின் வீடு, சென்னை தியாகராயநகர் போக் ரோட்டில் வசிக்கும் சாத்தூர் ராமச்சந்திரனின் முதல் மகன் நாராயணன் வீடு, கோட்டூர்புரத்தில் உள்ள மருமகன் அருண்குமார் வீடு மற்றும் மகள் வீடுகள், மைத்துனரின் வீடு உள்பட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து சோதனை நடந்து கொண்டிருப்பதால் தற்போது எதுவும் கூற முடியாது என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, பொன்முடி, அன்பரசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுரேஷ்ராஜன், என்.கே.கே.பி.ராஜா, கே.பி.பி.சாமி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைகளை நடத்தி,  வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக அவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வரிசையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைகளை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago