முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகவத்கீதை பிரச்சனை: ரஷ்யாவுக்கு இந்தியா வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

மாஸ்கோ, டிச.23 - பகவத்கீதையை தடை செய்ய வேண்டும் என்று கோரி ரஷ்ய கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து எழுந்துள்ள பிரச்சனைக்கு தீர்வுகாண தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவுக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. ரஷ்ய நாட்டின் சைபீரியாவில் உள்ள ஒரு கோர்ட்டில் இந்துக்களின் புனித நூலான பகவத்கீதையை தடை செய்ய வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இம்மாதம் 28 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பகவத்கீதையை தடை செய்வதற்கு ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அரசுக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து மாஸ்கோவில் உள்ள ரஷ்யாவுக்கான இந்திய தூதர் அஜய் மல்ஹோத்ரா மாஸ்கோவில் ரஷ்ய அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். அப்போது பகவத் கீதை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்று தான் கேட்டுக்கொண்டதாக அஜய்மல்ஹோத்ரா பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது ஒரு புனித நூல். இந்தியர்களின் சிந்தனைகளை பிரதிபலிக்கும் நூல். இது அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு நூல். எனவே இந்த நூலை தடை செய்யக்கூடாது என்று ரஷ்ய அதிகாரிகளிடம் தான் எடுத்துக்கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்