எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.- 26 - தமிழக முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் விழாவில் அறிவித்தபடி, கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் செல்ல நிதி உதவிக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் செல்ல ரூ.1 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இஸ்லாமிய மக்களின் ஹஜ் புனிதயாத்திரைக்கு அரசு உதவி செய்வதைப் போன்று, கிறிஸ்துவ மக்கள் மேற்கொள்ளும் ஜெருசலெம் புனித யாத்திரைக்கும் அரசு உதவி செய்யவேண்டும் என்று கிறிஸ்துவ சமுதாயத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
20.12.2011 அன்று சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா இது குறித்து ஏற்கெனவே தான் அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வருவதற்கு அரசு நிதி உதவி அளிக்கும் என்றும், இத்திட்டம் அனைத்து கிறிஸ்துவப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக அமையும் என்றும், முதற்கட்டமாக 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவித்தார். இத்திட்டம் தொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதில், இஸ்ரேல் ஏர்லைன் நிறுவனத்தினரால் மும்பையிலிருந்து அம்மான் வழியாக இஸ்ரேலுக்கு சென்று வர இரு வழி விமானக் கட்டணங்களாக ரூ.32,640/ அல்லது ரூ.35,524/ வசூலிக்கப்படுகின்றன என்றும், சென்னையிலிருந்து மும்பை சென்று வர தனியார் விமான நிறுவனங்கள் ரூ.12,000/ வரை கட்டணம் வசூலிக்கின்றன என்றும், எனவே சென்னையிலிருந்து ஜெருசலேம் சென்று வர இரு வழி பயணக் கட்டணம் மட்டும் ரூ.45,000/ முதல் ரூ.47,000/ வரை வசூலிக்கிறார்கள் என்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் தெரிவித்துள்ளார். மேற்சொன்ன குறிப்புகளின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் செல்வதற்காக பயணி ஒருவருக்கு விமானக் கட்டண உதவித்தொகையாக ஹஜ் புனிதப் பயணத்திற்காக இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு அதனுடைய நிதித் தொகுப்பிலிருந்து வழங்குவது போன்று, தமிழக அரசு தனது நிதியிலிருந்து ரூ.20,000/ முதல் ரூ.24,000/ வரை வழங்கலாம் என்றும், இந்த பயணக் கட்டண உதவித்தொகை ஜெருசலேம் புனிதப் பயணத்தை ஏர் இந்தியா மற்றும் இஸ்ரேல் ஏர் விமான சேவைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டுமே பொருந்துமாறு செய்யலாம் என்றும், இதற்கென முதற்கட்டமாக 1000 நபர்களுக்கு ரூ.2 கோடி மாநில அரசின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யலாம் என்றும், சிறுபான்மையினர் நல ஆணையரகத்தின் மூலம் இது குறித்து விளம்பரம் செய்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து குலுக்கல் முறையில் பயணிகளைத் தேர்வு செய்யலாம் என்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். மேலும், இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கு எதிர்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கான புனிதப் பயணக் குழு ஒன்றினை ஏற்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்துள்ளார். சிறுபான்மையினர் நல ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்தது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவப் பிரிவினரும் இஸ்ரேலில் உள்ள புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர அரசு நிதி உதவி அளிக்கும் புதிய திட்டம் ஒன்றினைச் செயல்படுத்த அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது. முதற்கட்டமாக 20112012 ஆம் ஆண்டில் 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வருவதற்கு பயணிகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு பயணிக்கு ரூ.20,000/ (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) வீதம் 500 பயணிகளுக்கு நிதியுதவி வழங்க மொத்தம் ரூ.1,00,00,000 (ரூபாய் ஒரு கோடி மட்டும்) அரசு ஒப்பளிப்பு செய்து ஆணையிடுகிறது. ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு நிதி உதவி வழங்கும் இத்திட்டம் குறித்து விளம்பரம் செய்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து பயணிகளைத் தேர்வு செய்யும் பணியினை மேற்கொள்ளுமாறு சிறுபான்மையினர் நல ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.இது ஒரு புதுப்பணி குறித்த செலவினமாகும். நாளடைவில் இதற்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெறப்படும். சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் கிடைக்கும் வரையில் எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து இச்செலவினம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்