எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.27 - பழவேற்காடு படகு விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 உடல்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் நேற்று ஒருநாள் கடை அடைப்பு நடத்தினர்.
பழவேற்காடு ஏரியில் நடந்த படகு விபத்தில் பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன. இந்த விபத்தில் பலியானவர்களின் ர்வீகம் நெல்லை மாவட்டம். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா இட்டமொழியை சேர்ந்தவர், தங்கப்பாண்டி நாடார். இவருடைய தம்பிகள் தங்கசாமி நாடார், சுந்தரபாண்டிய நாடார் (வயது 68). இவர்கள் குடும்பம் ஆரம்பத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தது. சுந்தரபாண்டிய நாடார் முதலில் பனை ஏறும் தொழில் செய்து வந்தார். அண்ணன்களுக்கு உதவியாக விவசாயமும் செய்தார். பின்னர் டெய்லர் கடை நடத்தினார். இவருடைய மனைவி பெயர் ஜெயமேரி. இவர்களுக்கு ஜெயதுரை, ஆசீர், கனகராஜ், தங்கராஜ் ஆகிய 4 மகன்கள். பாக்கியமணி என்ற ஒரே மகள். 5 குழந்தைகள் இருந்ததால் சுந்தரபாண்டிய நாடார் பிழைப்புக்கு மிகவும் சிரமப்பட்டார். இதனால் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி சென்னை சென்றார். சில ஆண்டுகள் கடை, ஓட்டல்களில் மாறி, மாறி வேலை செய்தார். பின்னர் கும்மிடிப்nullண்டியில் சொந்தமாக சிறிய ஓட்டல் ஒன்றை தொடங்கினார். குடும்பத்தினர் சேர்ந்து ஓட்டலை கவனித்து வந்தனர். அனைவரும் கடினமாக உழைத்து தொழிலில் மென்மேலும் வளர்ச்சி அடைந்தனர். சுந்தரபாண்டிய நாடாரின் மகன்கள், மகளுக்கு திருமணமாகி விட்டது. பேரன், பேத்திகளுடன் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக தற்போது வரை வசித்து வந்தனர். சுந்தரபாண்டிய நாடார் தனது குடும்பத்தினருடன் அவ்வப்போது சொந்த ஊரான இட்டமொழிக்கு வந்து செல்வார். முக்கிய குடும்ப விழாக்களுக்கு தவறாமல் வந்து விடுவார். ஆண்டுதோறும் தைப்பொங்கல் அன்று 2 பஸ்களில், சுந்தரபாண்டிய நாடாரின் குடும்பத்தினர் கும்மிடிப்nullண்டியில் இருந்து ஊருக்கு வருவார்கள். அப்போது தனது ஓட்டல்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தொழிலாளர்களையும் கூடவே அழைத்து வருவார். இட்டமொழியில் உள்ள தங்களுடைய தோட்டத்துக்கு சென்று, அங்குள்ள தாய் தந்தையர் நினைவு இடத்தில் வழிபாடு நடத்துவார். ஆண்டு தோறும் பொங்கல் அன்று அன்னதானமும் வழங்கி வந்துள்ளனர். தற்போது சுந்தரபாண்டிய நாடார் அண்ணன் தங்கசாமி நாடாரின் மகள் வயிற்று பேரன் ஜேக்கப் செல்வன் திருமணம் வருகிற 29ந் தேதி (வியாழக்கிழமை), திசையன்விளை நவ்வலடியை அடுத்த மரக்காட்டுவிளையில் நடைபெற உள்ளது. திருமண நிச்சயதார்த்தம் நடந்த அன்று சுந்தரபாண்டிய நாடார் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். திருமண விழாவுக்கு தன் குடும்பத்தினர் அனைவருடன் வருவதற்காக வருகிற 27ந் தேதி டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார். இதற்கிடையே மணமகன் ஜேக்கப் செல்வன் நேற்று மதியம் ஒரு மணி அளவில், தாத்தா சுந்தரபாண்டிய நாடாருடன் போனில் பேசினார். அப்போது, திருமண ஏற்பாடுகள் எல்லாம் எப்படி நடக்கின்றன என்றும், நாங்கள் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட குடும்பத்தினருடன் பழவேற்காடு ஏரிக்கு சுற்றுலா வந்து இருக்கிறோம், என்றும் கூறி உள்ளார். அதன் பின்னர்தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பற்றி சில மணி நேரம் கழித்தே போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அமைச்சர்கள் ரமணா, வி.மூர்த்தி இருவரும் பழவேற்காடுக்கு சென்று மீட்பு பணியை தீவிரப்படுத்தினார்கள். 126 போலீசார், கடலோரக் காவல் படையினர், மற்றும் மீனவர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இன்று காலை வரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீதி 5 பேர் உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவர்களது உடல் ஏரியில் வேறு எந்த பகுதியிலாவது கரை ஒதுங்கி இருக்கலாம் என்று தேடப் பட்டு வருகிறது. இதற்கிடையே மீட்கப்பட்ட 17 பேர் உடல்களும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆசிஷ்சட்டர்ஜி, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, எஸ்.பி. வனிதா, டி.எஸ்.பி. குமார், வருவாய் கோட்டாட்சியர் கந்தசாமி, இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இன்று காலை முதல் பிரேத பரிசோதனை நடந்தது. சுந்தரபாண்டியனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து உடல்கள் கும்மிடிப்nullண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. முதலில் சுந்தரபாண்டியன், ஜெயஜோதி, சுந்தரமேரி, ரோஸ்லின் மேரி ஆகிய 4 பேர் உடல்கள் கும்மிடிப்nullண்டி கொண்டு செல்லப்பட்டன. பிறகு ஜான்சிசார்லஸ், மெர்லின், ஜூலியட் (5 மாத குழந்தை), ஜோஷ்வா ஆகிய 5 பேரின் உடல்கள் கும்மிடிப்nullண்டிக்கு எடுத்து செல்லப்பட்டது. கும்மிடிப்nullண்டி பைபாஸ் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் அவர்களது உடல்கள் வைக்கப்பட்டு இறுதி ஆராதனைகளும், சடங்குகளும் செய்யப்பட்டன. அதன் பிறகு உடல்கள் பைபாஸ் சாலையில் கோரிமேடு பகுதியில் உள்ள இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காக சென்னையில் இருந்து அமரர் ஊர்தி வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. கோரிமேடு இடுகாட்டில் ஜேசிபி எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டிருந்தன. அங்கு சுந்தரபாண்டியன் மற்றும் அவர் குடும்பத்தினரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. சுந்தரபாண்டியன் குடும்பத்தினர் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கும்மிடிப்nullண்டியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. வியாபார பிரமுகர்கள் அனைவரும் கோரிமேடு இடுகாட்டுக்கு திரண்டு வந்து சுந்தரபாண்டியன் மற்றும் அவர் குடும்பத்தினர் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். சுந்தரபாண்டியனின் உறவினர்களும், பெண்களும் நூற்றுக்கணக்கில் கோரிமேடு இடுகாட்டுக்கு வந்திருந்தனர். பலியானவர்களின் உடல் களை பார்த்து அவர்கள் கதறியது மிகவும் பரிதாபமாக இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.