முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் அருகே மீண்டும் 5.8 அளவுக்கு நில நடுக்கம்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, மார்ச் 15 - ஜப்பான் அருகே நேற்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.  இதன் அளவு ரிக்டர் அளவையில் 5.8 ஆக பதிவாகியிருந்தது.ஜப்பான் நாட்டின் வட கிழக்கு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ரிக்டர் அளவு கோலில் 8.9 என்ற அளவுக்கு மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வை அடுத்து கடலில் சுனாமி அலைகள் எழுந்தன. இந்த பூகம்பம் மற்றும் சுனாமியில் சிக்கி 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். மேலும் பல ஆயிரம் கோடிக்கு சேதங்களும் ஏற்பட்டன.

இந்த நிலையில் நேற்று ஜப்பான் அருகே டோக்கியோவிலிருந்து 140 கி.மீ.தொலைவில் மீண்டும் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆக பதிவாகியிருந்தது.

ஆனால் இந்த பூகம்பத்தால் சுனாமி எதுவும் ஏற்படவில்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நில அதிர்வால் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரிய பூகம்பத்திற்கு பிறகு ஜப்பான் பிராந்தியத்தில் அடுத்தடுத்து பின் அதிர்வுகள் ஏற்பட்டன. ஆனால் அந்த பின் அதிர்வுகள் எல்லாவற்றையும் காட்டிலும் நேற்று ஏற்பட்ட அதிர்வு மிக அதிகமானதாக இருந்தது என்றும் மேலும் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்