முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி : வெற்றி பெற்றவர்களுக்கு நியமன உத்தரவு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - 2010-​ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனித்தனியாக பணி நியமன ஆணை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010-​ம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றிருந்தவர்களுக்கு அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுகுணா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனித்தனியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் பொது பிரிவு மற்றும் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவினர்கான வி.ஏ.ஓ. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் 6 வார காலத்திற்குள் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்