முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தானே புயலில் பலியான 26 பேருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.31 - தமிழகத்தை கடுமையாகத் தாக்கிய தானே புயலில் பலியான 26 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, பலியான ஒவ்வொருவர் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தை தாக்கிய ``தானே'' புயலின் காரணமாக நேற்று கடலூர் மாவட்டத்தில் மரம் மற்றும் சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேரும், புயல் மழை காரணமாக 8 பேரும் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் மரம் விழுந்ததில் ஒருவரும், மின்சாரம் தாக்கியதில் ஒருவரும், திருவள்ளூர் மாவட்டத்தில் மழை காரணமாக மின்சாரம் தாக்கியதில் ஒருவரும், மற்றும் சென்னை மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவரும் ஆக மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.

தானே புயலின் காரணமாக மரணமடைந்த 26 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் உதவித் தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்