முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் பலியானவர்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 15 - ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியால் பலியானவர்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்திலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியிலும் சிக்கி 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இவர்களுக்கு நேற்று இந்திய பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

ஜப்பானில் இந்த பேரழிவில் உயிர்நீத்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தின் லோக் சபை, ராஜ்ய சபை ஆகிய இரு சபைகளிலும்  இந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பேரழிவில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கும் ஜப்பான் மக்களுக்கும் லோக் சபை தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது என்று லோக் சபை சபாநாயகர் மீராகுமார் தெரிவித்தார்.

இதே போல ராஜ்ய சபையில் அதன் தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி  இரங்கல் செய்தியை வாசித்தார். இரு சபைகளிலும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான நட்புறவை வைத்துக்கொண்டுள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்று  என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்