முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பங்கு சந்தைகளில் வெளிநாட்டினர் முதலீடு செய்யலாம்:

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜன. - 3 - புத்தாண்டு முதல் இந்திய பங்கு சந்தைகளில் வெளிநாட்டினரும் நேரடியாக முதலீடு செய்து பங்குகளை வாங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த தனி நபர்கள், அறக்கட்டளைகள், பென்சன் நிதியை கையாளும் நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் இந்திய பங்கு சந்தைகளில் டாலர்களின் முதலீடு அதிகரிக்கும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில் டாலர்களை அதிகளவில் ஈர்த்ததால் ரூபாயின் மதிப்பு சரிவதையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. ஐரோப்பியாவில் நிலவும் பொருளாதார சிக்கல்களால் அந்த நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ள அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப எடுத்து வருகின்றனர். அதை டாலர்களில் முடக்கி வருகின்றனர். இந்த நிலையில் அன்னிய முதலீடுகளை அதிகரிக்கவும், இந்தியாவுக்குள் டாலர்கள் வருவதை அதிகரிக்கவும், பங்கு சந்தைகளை வெளிநாட்டினருக்கும் திறந்து விட்டுள்ளது மத்திய அரசு.
இதுவரை இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இப்போது தனிப்பட்ட நபர்களும் இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஆசியாவிலேயே மிக மோசமான நஷ்டத்தை சந்தித்த பங்கு சந்தை இந்திய பங்கு சந்தைதான் என்பது குறிப்பிடத்தக்கது. 2010 ம் ஆண்டு இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்ட ரூ. 15 லட்சம் கோடியும், 2011 ம் ஆமஅடில் முதலீட்டாளர்களால் திரும்ப எடுக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் 3 சதவீதமாக உள்ளது. போதிய டாலர்கள் இருப்பில் இல்லாததால் இறக்குமதி, ஏற்றுமதிகளை கையாளவும் மத்திய அரசு திணறி வருகிறது. இதை சரி செய்ய டாலர்களை நாட்டுக்குள் அதிகளவில் கொண்டுவருவது அவசியம். வெளிநாட்டினரை நேரடியாக பங்கு சந்தைகளில் அனுமதித்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்