முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே பையில் 100 பாஸ்போர்ட்டுகள்:டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜன.- 3 - டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் 100 பாஸ்போர்ட்டுகள் அடங்கிய பை ஒன்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் துர்க்கீஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பை இருந்ததை அவர்கள் பார்த்தனர். அந்த பையை திறந்துபார்த்தபோது அதில் 100 பாஸ்போர்ட்டுகள் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த பாஸ்போர்ட்டுகள் உண்மையானவையா? போலியானவையா? என்று சுங்க இலாகா அதிகாரிகளிடம் கேட்டபோது ஒரு முக்கிய அதிகாரி விடுப்பில் இருக்கிறார் அவர் வந்து ஆய்வு செய்தபிறகுதான் இவை உண்மையான பாஸ்போர்ட்டுகளா இல்லை போலியான பாஸ்போர்ட்டுகளா என்பதை முடிவு செய்ய முடியும் என்று அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இந்த பாஸ்போர்ட்டுகளில் சில இந்தியர்களுக்கு சொந்தமானவை என்றும் மற்றவை வெளிநாட்டினருக்கு சொந்தமானவை என்றும் அவர்கள் கூறினர். இதுகுறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது 100 பாஸ்போட்டுகள் அடங்கிய பையை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த பாஸ்போர்ட்டுகள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகுதான் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்வதா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்