எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.- 4 - தானே புயல் பாதிப்பை சீர் செய்ய மொத்தம் ரூ.800 கோடி நிதி உதவிக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நிவாவண உதவிகளை நேரில் வழங்க இன்று முதல்வர் ஜெயலலிதா கடலூர் செல்கிறார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 30.12.2011 அன்று காலை 6.30 மணிக்கு, தானே புயல் புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடந்து, கடலூர் மாவட்டத்திற்கு மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. தானே புயல் தமிழகத்தை தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்த உடனேயே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் நான் உத்தரவிட்டேன். இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது மட்டுமல்லாமல், 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் விளைவாக உயிர்ச் சேதங்கள் பெருமளவிற்கு தவிர்க்கப்பட்டன. புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண ஏற்பாடுகள் குறித்து புயல் தாக்கிய அன்றைய தினமே (30.12.2011) எனது தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தினையடுத்து, உடனடி நிவாரணப் பணிகள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை சீரமைத்திட 150 கோடி ரூபாயினை விடுவித்து நான் ஆணையிட்டதோடு, நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடும் வகையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் அனுப்பி வைத்தேன். நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 6 மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், 11 துணை ஆட்சியர்கள் மற்றும் 4 வளர்ச்சி திட்ட அதிகாரிகள் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். இந்தக் கடுமையான தானே புயலின் தாக்குதல் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 35 பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் 6,000 பேர் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீnullர் வழங்கப்பட்டன. நான் ஏற்கெனவே அறிவித்தபடி, இந்த பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் 1,000 ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை, மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன. இது தவிர, மின்சார பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளில் மெழுகுவர்த்திகள் வழங்கப்பட்டன.
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஏறத்தாழ 3.5 லட்சம் குடிசை மற்றும் ஓடு வேய்ந்த வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. பகுதியாக பாதிக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு நிவாரண உதவியாக தலா 2,500 ரூபாயும், முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடிசை மற்றும் ஓடுகளை இழந்த வீடுகளுக்கு தலா 5,000 ரூபாயும் எனது ஆணையின்படி வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கென 114 கோடி ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும். மத்திய அரசின் பேரிட நிவாரண வரையறையின்படி, சேதம் அடைந்த குடிசைகளுக்கு 2,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று இருந்தாலும், மேலே குறிப்பிட்டபடி கூடுதல் நிவாரணத் தொகைகள் எனது அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குவதற்காக, பிற மாவட்டங்களிலிருந்து 100 வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிவாரண உதவிகளை 5.1.2012-க்குள் வழங்கும்படி நான் உத்தரவிட்டுள்ளேன். தானே புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்திலுள்ள 5 நகராட்சிகளில் உள்ள 174 வார்டுகளிலும் குடிநீnullர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதில், 122 வார்டுகளில் குடிநீnullர் விநியோகம் தற்போது சீரமைக்கப்பட்டு, குழாய் மூலம் குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவன்றி, 57 லாரிகள் மூலம் மீதமுள்ள 52 வார்டுகளுக்கு குடிநீnullர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நகராட்சிகளில் 74 விழுக்காடு அளவுக்கு தற்போது குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டொரு நாட்களில் குடிநீnullர் விநியோகம் முற்றிலும் சீரமைக்கப்படும். கடலூர் மாவட்டத்திலுள்ள 16 பேரூராட்சிகளிலும் ஜெனரேட்டர் மூலம் குடிநீnullர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான பேரூராட்சிகளில் முழு அளவு குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது. ஒருசில பேரூராட்சிகளில் மட்டும் சுமார் 40 முதல் 50 விழுக்காடு அளவுக்கு குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பேரூராட்சிகளிலும் ஓரிரு நாட்களில் முழு அளவு குடிnullநீர் வழங்கப்பட்டுவிடும். கிராமப் பகுதிகளைப் பொறுத்தவரையில், கடலூர் மாவட்டத்தில் 11 கூட்டுக் குடிநீnullர்த் திட்டங்கள் உள்ளன. இதில் 5 கூட்டுக் குடிநீnullர்த் திட்டங்களுக்கு மின் வசதி சீரமைக்கப்பட்டு குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது. எஞ்சிய 6 கூட்டுக் குடிநீnullர்த் திட்டங்களில் ஜெனரேட்டர் மூலம் குடிநீnullர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், 309 ஜெனரேட்டர்கள் வாடகைக்கு பெறப்பட்டு அதன் மூலமும், 127 தண்ணீர் லாரிகள் மூலமும் ஊரகப் பகுதிகளுக்கு குடிநீnullர் வழங்கப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் குடிநீnullர் வழங்குவதைக் கண்காணிக்க, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தலைமையில் 8 அதிகாரிகள் அனுப்பப்பட்டு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். குடிநீnullர் விநியோகத்திற்கென 50 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
தானே புயல் தாக்குதல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் 27 உயர் அழுத்த மின் கோபுரங்கள், 4,500 விநியோக மின்மாற்றிகள், 36,000 மின் கம்பங்கள், 350 கிலோ மீட்டர் nullநீளத்திற்கான மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. இவற்றை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய நான் உத்தரவிட்டதன் அடிப்படையில், கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய இடங்களில் 50 விழுக்காடு அளவிற்கும், விருத்தாசலம், சிதம்பரம் நகரங்களில் 90 விழுக்காடு அளவிற்கும் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் 1,000 பணியாளர்களை மற்ற மாவட்டங்களிலிருந்து அனுப்பி, கடலூர் மாவட்டத்தில் மின் விநியோகத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 5.1.2012-க்குள் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின் விநியோகம் சீர்செய்யப்பட்டுவிடும். இந்த மின் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 300 கோடி ரூபாய் நிதி உதவியை உடனடியாக வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
தானே புயல் தாக்குதல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் 58,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும், 23,500 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி பயிர்களும், 5,752 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்களும், 8,947 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பயறு, பருத்தி, எண்ணெய் வகைகள் மற்றும் பலா மரங்கள் போன்றவையும் சேதம் அடைந்துள்ளன. விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களையும் சேர்த்து சுமார் 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. நெல் மற்றும் நீnullர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 4,000 ரூபாயும், பலா, முந்திரி போன்ற நிரந்தரப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 6,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட மத்திய அரசின் பேரிட நிவாரண வரையறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், நெற் பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 10,000 ரூபாயும், மற்ற நீnullர்ப்பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,500 ரூபாயும் நிவாரணம் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். மேலும், பலா, முந்திரி போன்ற தோட்டப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 9,000 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். பயிர் சேதங்களுக்காக மொத்தம் 166 கோடி ரூபாய் அளவுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில், சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 20,500 லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது. எஞ்சிய பால் தேவை தனியார் பால் நிறுவனங்களால் நிறைவு செய்யப்பட்டு வந்தது. தானே புயல் காரணமாக, தனியார் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் பால் அளவை குறைத்துள்ளதால், கடலூர் மாவட்டத்தில் பால் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, ஆவின் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 35,000 லிட்டர் பால் விநியோகம் செய்து வருகிறது. 2,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குளிரூட்டும் வசதி செய்யப்பட்ட வாகனங்கள் சென்னையிலிருந்து கடலூருக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், சில்லறை அளவில் பால் விநியோகம் செய்வதற்காக, 9,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நடமாடும் பால் டேங்கர் கடலூருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தானே புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில், கட்டுமரங்கள், வல்லம், படகுகள், விசைப் படகுகள் போன்ற சுமார் 4,600 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. முழுவதும் சேதமடைந்த பாரம்பரிய மீன்பிடி படகுகளுக்கு 7,500 ரூபாயும், பகுதி சேதமடைந்தவைகளுக்கு 2,500 ரூபாயும் வழங்குவதற்குத்தான் மத்திய அரசு வரையறை செய்துள்ளது. எனினும், மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இதனை தற்போது உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். இதன்படி, முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 32,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 10,000 ரூபாயும், முழுவதும் சேதமடைந்த கு.சு.ஞ. படகுகள் மற்றும் வலைகளுக்கு 75,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு 20,000 ரூபாயும், முழுவதும் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு 5 லட்சம் ரூபாயும், பகுதி சேதமடைந்த விசைப் படகுகளுக்கு 3 லட்சம் ரூபாயும், வலைகள் மட்டுமே சேதம் அடைந்த இனங்களுக்கு 10,000 ரூபாயும் வழங்கப்படும். இதற்கென, 20 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
தானே புயல் காரணமாக, 519 கால்நடைகள் மற்றும் 5,100 கோழிகள் இறந்துவிட்டன. நான் ஏற்கெனவே உயர்த்தி வழங்க அறிவித்தபடி, மாடு ஒன்றுக்கு 20,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 2,000 ரூபாயும், கோழி ஒன்றுக்கு 100 ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படும். தானே புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் விழுந்ததன் காரணமாக, 1,458 இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 90 இயந்திரங்கள், 3 கிரேன்கள், 9 லாரிகள் ஆகியவற்றை பயன்படுத்தி சுமார் 1,000 பணியாளர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் காரணமாக 31.12.2011 அன்றே அனைத்து சாலைகளும் சீர் செய்யப்பட்டன. சாலைகளில் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீர்செய்ய 150 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதனை உடனடியாக வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
குடிசைகள் மற்றும் ஓட்டு வீடுகள் சேதத்திற்கு நிவாரண உதவியாக 114 கோடி ரூபாயும்; குடிnullர் விநியோகத்திற்காக 50 கோடி ரூபாயும்; மின் பணிகளை சீரமைக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக 300 கோடி ரூபாயும்; பயிர் சேதங்களுக்காக 166 கோடி ரூபாயும்; மீன்பிடி படகுகள் சேதத்திற்கான நிவாரணத் தொகையாக 20 கோடி ரூபாயும்; சாலைகளின் தற்காலிக சீரமைப்பிற்காக 150 கோடி ரூபாயும்; உயிரிழப்பு, கால்நடை இழப்பு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டது உட்பட பிற இனங்களுக்காக 50 கோடி ரூபாயும்; ஆக மொத்தம் 850 கோடி ரூபாய் நிதி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதில், தானே புயல் தாக்கிய அன்றே விடுவிக்கப்பட்ட 150 கோடி ரூபாய் போக, எஞ்சிய 700 கோடி ரூபாயை உடனடியாக வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு 4.1.2012 அன்று நான் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்க உள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பெருமக்கள் கடலூர் மாவட்டத்திலேயே தங்கியிருந்து நிவாரண உதவிகளை வழங்குவார்கள்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.