முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனியில் ஒரே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

பழனி, ஜன. - 4 - பழனியில் ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்துக் கொண்டனர். பழனி பழனியாண்டவர் மெட்ரிகுலேசன் பள்ளியில் 1987 ம் ஆண்டு 10 ம் வகுப்பு படித்த மாணவர்கள் 25 ஆண்டுகள் கழித்து அதே பள்ளியில் ஒரு விழாவில் கலந்து கொண்டனர். இதற்கு நகர்மன்ற தலைவர் வேலுமணி தலைமை வகித்தார். அவரும் 1987 ல் இதே பள்ளியில் 10 ம் வகுப்பு படித்த மாணவர்தான். இந்த விழாவில் 18 மாணவர்களும், 6 மாணவிகளும் பங்கேற்றனர். மேலும் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சுலோசனா, ராமசீதா, முதல்வர் யோகமணி உட்பட 16 ஆசிரியர்களும் பங்கேற்றனர். அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் முன்னாள் மாணவர் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதில் முன்னாள் மாணவர்களான எச்.பி. நிறுவன ஆஸியா பசிபிக் சிங்கப்பூர் தலைவர் சுந்தர ராமலிங்கம், மார்க்குழு சென்னை பொது மேலாளர் ஹரிகிருஷ்ணன், டெல்லி என்.ஐ.ஐ.டி. துணை தலைவர் சிவகுமார், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாக்டர் மணிகண்டன், மும்பை சதீஷ்குமார், சென்னை திருக்குமார், பழனி விஸ்வநாதன், கோவை வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்