முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்டம்பர் மாதம் வரை ரேசனில் பருப்பு, பாமாயில் கிடைக்கும்

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன. - 4 - துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் ரேசன் கடைகளில் வரும் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் நிர்மலா வெளியிட்டுள்ள உத்தரவில்,  தமிழகத்தில் சிறப்பு பொது விநியோக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் மற்றும் செறிவூட்டப்பட்ட கோதுமை ஆகியவை ரேசன் கடைகளில் சிற்பபாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் வழங்கப்படும் இந்த திட்டம் கடந்த டிசம்பர் 31 ம் தேதியுடன் நிறைவடைந்தது.  இந்த நிலையில் சிறப்பு பொது விநியோக திட்டத்தை 2012 டிசம்பர் 31 ம் தேதி வரை நீடித்து உத்தரவிட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் பஷீர் அகமது அரசுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை பரிசீலித்து தமிழக அரசு ஜனவரி 1 ம் தேதி முதல் வரும் செப்டம்பர் 30 ம் தேதி வரை சிறப்பு பொது விநியோக திட்டத்தை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஒன்பது மாதங்களுக்கு ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு துறை செயலாளர் நிர்மலா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு போன்றவை ஒரு கிலோவுக்கு ரூ. 30 விலையிலும், பாமாயில் கிலோவுக்கு ரூ. 25 என்ற விலையிலும் ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்