எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.- 5 - சென்னையில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த ஒற்றையர் 2வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வாரிங்கா போராடி பிரான்ஸ் வீரர் எட்வர்டு ரோஜர் வாசலினை தோற்கடித்து காலிறுதிக்கு நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் மிலோஸ் ரோனிக், டுடி சேலா ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்.டி.ஏ.டி. சர்வதேச டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் 2வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் நடுக்களத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் கனடா வீரர் மிலாஸ் ரோனிக்கும், ருமேனிய வீரர் விக்டர் வானெஸ்குவும் மோதினர். இந்த போட்டியில் 4வது நிலை வீரராக வரிசைப்படுத்தப்பட்டவரான ரோனிக், உலக ரேங்கிங்கில் ஒற்றையரில் 31வது இடமும், இரட்டையரில் 368வது இடமும் பிடித்து வருகிறார். இவர் வானெஸ்குவை(90வது ரேங்கிங்) எளிதில் 6க்கு1, 6க்கு4 என்ற நேர்செட்டில் தோற்கடித்து காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இஸ்ரேல் வீரர் டுடி சேலாவும், பிரான்ஸ் வீரர் பெனோட் பெயரும் மோதினர். உலக ரேங்கிங்கில் ஒற்றையரில் இருவருமே 94 வது ரேங்க் பிடித்து வருகின்றனர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை சேலா எளிதில் கைப்பற்றினாலும், 2வது செட் ஆட்டத்தில் பெயருடன் போராட வேண்டியிருந்தது. முடிவில் டுடி சேலா 6க்கு2, 6க்கு4 என்ற நேர்செட்டில் வெற்றி கண்டு காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதி ஆட்டத்தில் சேலா, மிலாஸ் ரோனிக்குடன் மோதுகிறார். நேற்று நடந்த பரபரப்பான ஒற்றையர் ஆட்டத்தின் 2வது சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் ஸ்டானிஸ்லஸ் வாரிங்காவும், பிரான்ஸ் வீரர் எட்வர்ட் ரோஜர் வாசலினும் மோதினர். முதல் சுற்றில் வாரிங்கா பை பெற்று நேரடியாக 2வது சுற்றுக்கு முன்னேறி, அதில் நேற்று வாசலினுடன் மோதினார். வாசலின் தனது முதல் சுற்றில் சக நாட்டவரான எரிக் புரோடானை தோற்கடித்து நேற்று 2வது சுற்றில் நடப்பு சாம்பியனை எதிர்கொண்டார். முதல் செட்டில் வாசலின் 6க்கு3 என்ற கேம்களில் கைப்பற்றினார். 2வது செட்டிலும் 3க்கு3 என்ற கேம்கள் வரை சமநிலை செய்தார். எனவே, வாரிங்கா தேருவாரா என்ற நிலையில் 7வது கேமை மிக அபாரமாக பிரேக் செய்து முன்னேறிய வாரிங்கா, 8வது கேமை தக்கவைத்ததோடு, 9வது கேமையும் பிரேக் செய்து 6க்கு3 என 2வது செட்டை கைப்பற்றி 1க்கு1 என்ற செட் சமநிலையை ஏற்படுத்தினார். இதனைத்தொடர்ந்து நடந்த 3வது செட் ஆட்டத்திலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்ற பாணியில் இருவருமே கடுமையாக போராடினர். 3வது செட்டின் 6வது கேமை சர்வ் செய்த வாசலின் போராடி தக்க வைத்தார். 7வது கேமில் மிக அபாரமாக விளையாடி பிரேக் செய்தும், அடுத்ததை தக்கவைத்தும் 5க்கு3 என முன்னிலை பெற்றார்.
9வது கேமில் மிக அபார சர்வீஸ்கள் மூலம் புள்ளிகள் குவித்த வாரிங்கா இதனை எளிதில் கைப்பற்றியதோடு, இதக்கு அடுத்த கேமில் கடுமையாக போராடி பிரேக் செய்து 5க்கு5 என்ற சமநிலையை ஏற்படுத்தினார். அதோடு 11வது கேமில் சர்வீஸ் வாய்ப்பை தக்கவைத்து 6க்கு5 என முன்னிலை பெற்றார். வாசலினின் சர்வீசை பிரேக் செய்தால் மட்டுமே வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் வாரிங்கா இதில் கடுமையாக போராடினார். ஆனால், வாசலினும் இதனை விடுவதாக இல்லை. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளைப்போன்று மிக அபாரமாக நடந்த போட்டியில் வாரிங்கா போராடி வெற்றி கண்டார்.
ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் nullடித்த இந்த போராட்டத்தில் வாரிங்கா 3க்கு6, 6க்கு3, 7க்கு5 என்ற கேம்கள் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப்போட்டிக்கு முன்னேறினார். காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கோ சோடாவுடன் மோதுகிறார்.
வாரிங்காவுக்கு கடும் சவால் தந்த வாசலின் 2வது சுற்றோடு ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்று வெளியேறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.