முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லிபுத்தூர். ஜனவரி 6-ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசிதிபெற்ற கோவிலாகும். இங்கு மார்கழி நீராட்ட உற்சவம் கடந்த 26.12.11 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல்பத்து திருமொழித்திருநாள் 26ந்தேதி முதல் 4  ந்தேதி வரை நடைபெற்றது. இன்று  5ந்தேதி முதல் இராப்பத்து திருவாய்மொழித்திருநாள் தொடங்கி 15 ந்தேதி வரை நடைபெறுகிறது. இராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி இன்று காலை 7.35 க்கு சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் -ரெங்கமன்னாரை தரிசித்தனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்