எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.6 - சென்னை போலீஸார் பதிவு செய்துள்ள நிலமோசடி வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை பெருநகர நீnullதிமன்றத்தின் உத்தரவுப்படி முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று செனை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். இது குறித்த விபரம் வருமாறு:- .சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் ரோட்டை சேர்ந்தவர் தொழில் அதிபர் என்.எஸ்.குமார் என்ற சேஷாத்திரி குமார் (வயது64). இவரது தந்தை காலஞ்சென்ற நாராயணசாமி. சுதந்திர போராட்ட வீரர்.
ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் சேஷாத்திரி குமாருக்கு சொந்தமான 2.1/2 கிரவுண்ட் நிலத்தில் 4445 சதுர அடியில் வீடு இருந்தது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். இவர்களுக்கு சொந்தமான 6 கிரவுண்ட் நிலத்தை கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் வங்கி மூலம் வாங்கி அதில் குடியேறினார். அதன் பிறகு வீட்டுக்கு அருகில் உள்ள சேஷாத்திரி குமாருக்கு சொந்தமான ரூ.5.1/2 கோடி மதிப்புள்ள வீட்டை கட்டாயப்படுத்தி மிரட்டி விலைக்கு வாங்கி கொண்டதாக சேஷாத்திரி குமார் கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரில், மு.க.ஸ்டாலின், அவருடைய மகன் உதயநிதி, ஸ்டாலினின் கூட்டாளிகள் வேணுகோபால்ரெட்டி, ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீதும் புகார் கொடுத்திருந்தார். சீனிவாசன் என்பவர் வீட்டுக்கு வந்து ஒருகோடி 15லட்சம் பணம் கொடுத்ததாகவும், இது கணக்கில் வராத பணம். இது பற்றியாரிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் தளபதி (ஸ்டாலின்), மத்திய தி.மு.க. அமைச்சர் பழனிமாணிக்கத்திடம் சொல்லி இன்கம்டாக்ஸ் மூலம் தொந்தரவு செய்வார் என்று சீனிவாசன் கூறிவிட்டு, கொடுத்த பணத்தில் ரூ.15 லட்சத்தை கமிஷன் என்ற பெயரில் எடுத்துக் கொண்டுவிட்டார். அந்த வீட்டை உதயநிதி பெயரில் ரூ.20 ஆயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் போட்டு ஸ்டாலின் மகள் செந்தாமரை குடியிருந்து வருகிறார் என்று புகாரில் கூறியிருந்தார்.
இது பற்றி போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அபயகுமார் சிங் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜேசுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த புகார் கொடுக்கபட்டது தெரியவந்ததும் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வக்கீலுடன் சென்று மனு கொடுத்தார். அதன்பிறகு இந்த வழக்கு தொடர்பாக மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி, ஜகோர்ட்டு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதன் பேரில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் தொகை செலுத்த வேண்டும் என்று ஜகோர்ட் உத்தரவிட்டது. டிசம்பர் 22-ந் தேதியுடன் ஜகோர்ட் வழங்கிய முன்ஜாமீன் உத்தரவு முடியும் தருவாயில் முன்னதாக ஜகோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக் கொண்டார்.
இதை தொடர்ந்து கடந்த மாதம் உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் தொகை செலுத்தினார். அந்த கோர்ட்டின் உத்தரவுப்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவு அலுவலகத்தில் நில அபகரிப்பு விசாரணை அதிகாரி முன்பு ஒருமாதத்துக்கு காலையில் 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், அதன் பிறகு போலீசார் கூப்பிடும் நேரம் விசாரணைக்கு வர வேண்டும் என்று மாஜிஸ்திரேட் ராம் ஜாமீன் வழங்கினார். அந்த முன்ஜாமீன் உத்தரவுப்படி உதயநிதி ஸ்டாலின் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள, மத்திய குற்றப்பிரிவு நிலஅபகரிப்பு வழக்கு உதவி கமிஷனர் ஜேசுராஜன் அலுவலகத்துக்கு நேற்று காலை 9.50 மணிக்கு உதயநிதி, 6 வக்கீல்களுடன் வந்தார். ஆஜராகி இன்ஸ்பெக்டர் காதர் பாஷா முன்னிலையில் கையெழுத்திட்டார். அதன்பிறகு அவரிடம் இன்ஸ்பெக்டர் காதாபாட்சா, 10 கேள்விகள் கேட்டார்.
அந்த வீட்டை வாங்கியதாக கூறப்படும் வேணுகோபால்ரெட்டியை உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார். உதயநிதிக்கு பதிலாக அவருடன் வந்த வக்கீல்கள் பதில் அளித்தனர்.
அந்த வீட்டில் வாடகைக்கும் இருக்கிறீர்களா என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். ஆம். எனது தங்கை செந்தமாரை வாடகைக்கு இருக்கிறார் என்று கூறினார்.
இதுபோல் 10 கேள்விகளுக்கு பதில் சொன்னபிறகு விசாரணைக்காக நாளை காலை 10 மணிக்கு வர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் காதர்பாசா கூறினார். அதன்பிறகு உதயநிதி கமிஷனர் ஆபீசுக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்தகாரில் ஏறி வீட்டுக்குச் சென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.