முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழர் எழுச்சி அரசியல் மாநாடு ஆகஸ்ட் 17ந்தேதி நடக்கிறது

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி.ஜன-07, விடுதலை சிறுத்தை கட்சிகளின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கண்டொண்மெண்ட் கற்பகரட்சகி மஹாலில் கட்சித்தலைவர் தொல்.திருமாவளன் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சிந்தனை செல்வன், ஆத்தூர் அரசு, புதுவை பாவாணன், முகமதுயூசுப், வக்கீல் பழனிமுத்து, ஒன்றியஅரசன், திருச்சி பிரபாகரன், மாவட்டச் செயலாளர்கள் அரசு, தமிழாதன், மற்றும் மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட 2ஆயிரம் கலந்து கொண்டனர். இப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு. ஆகஸ்ட் 17ந்தேதி தமிழர் எழுச்சி நாளன்று மாபெரும் மாநில அரசியல் மாநாடு நடத்துவது என்றும், அப்போது விடுதலை சிறுத்தைகளுக்கென தொலைக்காட்சி ஊடகம் ஒன்றை தொடங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. தானே புயலில் உயிரிழந்தோர் குடும்ப நிதியை ரூபாய் 2லட்சத்திலிருந்து ரூ.5லட்சமாக உயர்த்தி தரவேண்டும். இந்த புயலில் பழியான 40க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதகளை ஒருங்கிணைத்து டெல்லியில் பிரதமர் மன்மோகனை சந்தித்து 2006ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச nullதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு வற்புறுத்த இப் பொதுத்குழு கேட்டக்கொள்கிறது. இனப்படுகொலை, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ராஜபக்ஷே கும்பலை அனைத்துலக nullதிமன்றத்தின் முன்னிருத்தி தண்டிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  தமிழகம் எங்குள்ள லட்சக்கணக்கான ஏக்கர்பரப்புள்ள பஞ்சமி நிலங்களை கண்டிறியவும் அவற்றை மீட்டு உரியவருக்கு ஒப்படைப்பு செய்யவும் தமிழக அரசு ஏற்கெனவே நியமித்துள்ள பஞ்சமி நில மீட்பு ஆணையம் முறையாக இயங்க அனுமதிக்க வேண்டும். மூன்று ஆண்டுக்கு ஒருமுறை கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட தலைமை நிர்வாக பொறுப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் புதியதாக  நியமிக்கப்படுவார்கள் என்றும் அதற்குரிய விண்ணப்பங்களை வருகிற 31​ந்தேதி வரை உரிய கட்டணத்துடன் பெறுவது எனவும், பிப்ரவரி மாத இறுதித்குள் அனைத்துப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள் எனவும் இப் பொதுக்குழு உறுதியேற்கிறது. இவ்வாறு பொதுக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டையை தொல்.திருமாவளன் எம்.பி. வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்