முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பைப்வெடிகுண்டு: வழக்கில் கைதான 2 பேரின் ஜாமீன் மனுதள்ளுபடி

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஜன. - 7 - பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை கொலை செய்வதற்காக பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் கைதான இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி வழியே கடந்த அக்டோபர் மாதம் அத்வானி யாத்திரை செல்ல இருந்த சமயத்தில் தரைப்பாலத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டை போலீசார் கண்டுபிடித்து அகற்றினர். இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசார் மதுரை நெல்பேட்டையை சேர்ந்த அப்துல்லா மற்றும் சிம்மக்கல் பகுதியை சேர்ந்த இஸ்மத் ஆகியோரை கைது செய்தனர். மூன்றாவதாக ஹக்கீம் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்களில் அப்துல்லாவும், இஸ்மத்தும் ஜாமீன் வழங்க கோரி மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்களை விசாரித்த நீதிபதி கோகுல்தாஸ் இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்