எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை. மார்ச்.16 - பாராளுமன்றத்தில் 10 தொகுதியில் போட்டியிட்டோம், அதை 16 தொகுதிகளாக மாற்றினோம். சட்டமன்றத்தில் 48 தொகுதிகளில் போட்டியிட்டோம், அதை 63 தொகுதிகளாக மாற்றியுள்ளோம். தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரஸை முன்னிலைப்படுத்தும் முயற்சி தொடரும், தேர்தலுககு பிறகு சோனியா-கருணாநிதி பேசி கூட்டணி ஆட்சி அமைப்போம். தொண்டர்களுக்கு விரைவில் நல்ல சேதி வரும் என்று தங்கபாலு சென்னையில் கூறினார்.
63 தொகுதிகளுக்கும் நாளை முதல் விருப்ப மனு பெறப்படும் என்று தங்கபாலு கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளுக்கும நாளை (புதன்கிழமை) காலை முதல் போட்டியிட விரும்புகிற வர்கள் விருப்ப மனு செய்யலாம். நாளை மறுநாள் வரை இரண்டு நாட்கள் விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விரும்புபவர்கள் சத்தியமூர்த்தி பவனில் விண்ணப்பங்களை பெற்று, nullர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பொது தொகுதிக்கு ரூ.5000, தனித் தொகுதிக்கு ரூ.2500, பெண்களுக்கு ரு.2500 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பப்படும்.
பின்னர் சோனியா தலைமையிலான தேர்தல் குழு வேட்பாளர் பட்டியலை உறுதி செய்து அறிவிக்கும். காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக ஐவர் குழு தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற பெரும்பான்மை தொகுதிகளை பெற்று தந்துள்ளது. மேலும் எல்லா மாவட்டங்களிலும் பெரும் பான்மையான பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும் வகையில் தொகுதிகளை பெற்று உறுதி செய்துள்ளோம்.
தர்மபுரி, தேனி ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் காங்கிரஸ் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்காக எவ்வளவோ முயற்சி எடுத்தும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டியிருந்ததால் காங்கிரஸ் போட்டியிட முடியவில்லை. அடுத்துவரும் உள்ளாட்சி மற்றும் மேல்சபை தேர்தலில் அந்த இரு மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரசாருக்கு முன்னுரிமை வழங்கப்படும். சோனியா ஒப்புதலோடு வெளியிடப்பட்ட பின்பு இந்த 63 தொகுதிகளிலும் மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றிக்கும், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கும் உரிமையோடும் பொறுப்போடும் அனைவரும் பாடுபட வேண்டும்.
சோனியாகாந்தி வகுத்த நெறிமுறை அடிப்படையில் காங்கிரஸ் தொகுதிகள் பெறப்பட்டுள்ளன. அரசியல் ரீதியாக பல்வேறு கட்டங்களை தாண்டி இன்று உடன்பாட்டை நிறைவு செய்துள்ளோம். கடந்த தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். 2004 பாராளுமன்ற தேர்தலில் 10 தொகுதியில் போட்டியிட்டோம். கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் 16 தொகுதிகளை பெற்று போட்டியிட்டோம்.
தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரசை முன்னிலைப்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருகிறோம். மத்திய அரசின் சாதனைகளும் மாநில அரசு நிறை வேற்றிய மக்கள் நலத் திட்டங்களும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு கைகொடுக்கும். அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளிலும் நல்லாட்சி தொடர இந்த கூட்டணியை மக்கள் வெற்றிபெறச் செய்வார்கள். காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார்.
கேள்வி: காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?
பதில்: தேர்தல் முடிவுக்குப் பிறகு சோனியாவும் முதல் அமைச்சர் கருணாநிதியும் சேர்ந்து நல்ல செய்தியை வழங்குவார்கள். காங்கிரஸ் தொண்டர்களுக்கு வசந்த காலம், நல்ல செய்தி வரும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.