முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.11 - சேலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ராஜேந்திரன், வைத்தியநாதன், நல்லேந்திரன் ஆகியோர் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் புறநகர் மாவட்டம், கருப்பூர் பேரூராட்சிக் கழக பொருளாளர் குண்டூர் வி.ராஜேந்திரன், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருப்பணந்தாள் ஒன்றியம், கோவில்ராமபுரம் ஊராட்சிக்கழக செயலாளர் மா.வைத்தியநாதன் ஆகியோர் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டும், சேலம் புறநகர் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி 10வது வார்டு கழக செயலாளர் என்.நல்லேந்திரன் சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்புச்சகோதரர்கள் ராஜேந்திரன், வைத்தியநாதன் மற்றும் நல்லேந்திரன் ஆகியோரை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்