முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரயில் மோதி பலி

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஜன.11 - மதுரையில் ரயில் மோதிபோலீஸ் இன்ஸ்பெக்டர் பலியானார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  மதுரை விளாங்குடி ரயில்வே தண்டவாளம் அருகே நேற்று காலை போலீஸ் சீருடை அணிந்த ஒருவர் பிணமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் பார்த்து ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து ரயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் மதுரை செல்லூர் போலீஸ் இன்பெக்டர் கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

சிலமாதங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் நகர குற்றப்பிரிவில் பணிபுரிந்தார். பின்னர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட கோபாலகிருஷ்ணன் சில வாரங்களுக்கு முன்பு செல்லூர் இன்ஸ்பெக்டராக (பொறுப்பு) பணியாற்றிவந்தார். இந்தநிலையில் தான் நேற்று ரயில்மோதி பலியாகி உள்ளார். கோபாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்