முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணவர் - மாமியார் மீது சிரஞ்சீவி மகள் புகார்

புதன்கிழமை, 16 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

ஐதராபாத்,மார்ச்.16 - ரூ. 50 லட்சம் வரதட்சணை கேட்டு கணவரும், மாமியாரும் அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகர் சிரஞ்சீவியின் மகள் போலீசில் புகார் செய்துள்ளார். 

தெலுங்கு பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகள் சிரிஷா. இவர் தனது பெற்றோரை எதிர்த்து காதலன் பரத்வாஜை கடந்த 2007 ல் திருமணம் செய்து கொண்டார். ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்களிடையே சமீபத்தில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. கணவரை விட்டு பிரிந்த சிரிஷா, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே. கானை சந்தித்து புகார் கொடுத்தார். அதில் எனது கணவரும், மாமியாரும் என்னை வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்துகின்றனர். எப்போது பணம் தேவை என்றாலும் என்னிடம் கேட்டு வாங்கி செல்வார் பரத்வாஜ். இது தொடர்கதையானதால் என் பெயரில் உள்ள சொத்துக்களை எனது பெற்றோர் பெயருக்கு மாற்றி எழுதினேன். இதனால் கோபமடைந்த எனது கணவரும், மாமியாரும் துன்புறுத்தினார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்ட நான் எனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சமீபத்தில் சென்ற போது அடிக்கடி போன் போட்டு நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு ரூ 50 லட்சம் கேட்டு எனக்கு தொல்லை கொடுத்தனர். இதனால் வேதனையடைந்த நான் பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்து விட்டேன். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த புகாரின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிரிஸ் தற்போது மத்திய திரைப்பட குழுவினர் பிராந்திய பிரிவு உறுப்பினராக இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்