எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.13 - தானே புயல் சீரமைப்பு நிவாரண நிதிக்கு, ஒரே நாளில் 200 கோடி ரூபாய் குவிந்தது மேலும்,மேலும் தொடர்ந்து நிதி குவிந்துவருகிறது. தானே புயல் கடந்தபோது கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. புயலால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. போர்க்கால அடிப் படைகளில் சீரமைப்பு பணிகள் அந்த மாவட்டங்களில் நடக்கின்றன. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ. 5250 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக மறு வாழ்வு அளிப்பதற்காக முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கும்படி முதல்அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொது உணர்வு உள்ளவர்கள், தொழில் அதிபர்கள், அரசு சாரா அமைப்புகள், தர்ம சிந்தனையாளர்கள் நன்கொடை வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று பல்வேறு அமைப்புகள், அரசு ஊழியர்கள் முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகிறார்கள். முதலாவதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஒ.) மாநில தலைவர் இரா.சண்முகராஜா அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்குவதாக அறிவித்தார். அவர் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அதற்கான கடிதத்தையும் கொடுத்தார். இதுபற்றி இரா. சண்முகராஜா கூறியதாவது: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உரிய நிவாரணம் வழங்குவதற்கு முதல்அமைச்சர் நன்கொடை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழக அரசில் பணிபுரியும் 13 1/2 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக அளிப்பதற்கு முன் வந்துள்ளனர். ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்தன் மூலம் சுமார் ரூ. 150 கோடிக்கு மேல் கிடைக்க வழிவகை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து பல்வேறு அரசு சங்கங்கள் தானாக முன்வந்து நிவாரண நிதிக்கு ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய கடிதம் கொடுத்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய அதன் தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் கடிதம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது: புயல் பாதித்த மக்களுக்கு உதவ வேண்டும் என்று முதல்அமைச்சர் கூறியதும் அரசு டாக்டர்கள் தங்களின் பங்களிப்பு அதில் இருக்க வேண்டும் என்று கருதி தங்களின் ஒருநாள் சம்ப ளத்தை வழங்க முடிவு செய்தனர். அரசு டாக்டர்கள் 15 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இதன் மூலம் முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சுமார் ரூ. 2 கோடி கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் சார்பில் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ளும்படி அதன் தலைவர் பொ.சவுந்திரராஜன் கடிதம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணியில் அரசுடன் இணைந்து செயல்பட அரசு அலுவலர் கழகம் சி மற்றும் டி பிரிவு விரும்புகிறது. முதல்அமைச்சர் எங்களின் ஒருநாள் ஊதியத்தை ஏற்று மக்கள் துயரத்தில் பங்கேற்க வாய்ப்பு வழங்க வேண்டுகிறோம் என்றார். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணி யாளர்கள் மாநில சங்க தலைவர் கே.கணேசன் கூறியதாவது: தானே புயல் நிவாரண நிதிக்கு எங்களது சங்கம் முதல்அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒருநாள் சம்பளம் வழங்க முடிவு செய்து கடிதம் கொடுத்துள்ளோம். சங்கத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ. 8 1/2 கோடி உதவி தொகை கிடைக்கும். மேலும் சங்கம் சார்பில் கடலூரில் புயலால் கடுமையாக பாதித்த 400 பேருக்கு வேட்டிசேலையும், 10 கிலோ அரிசியும் இன்று (வியாழக்கிழமை) வழங்கப்படுகிறது. அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் ரவி ரெங்கராஜ், பொதுச் செயலாளர் பாக்கியநாதன், இணை பொதுச்செயலாளர் வாசு ஆகியோர் கூறுகையில், கடலூர், விழுப்புரம் மக்களுக்கு உதவ கிராம நிர்வாக அலுவலர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளோம் என்றனர். தலைமை செயலக சங்கம், தொடக்கப்பள்ளி, ஆசிரியர் கூட்டணி, வருவாய்த்துறை அலுவலர் சங்கம், அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க கடிதம் கொடுத்துள்ளனர். பல்வேறு சங்கங்கள் கொடுத்துள்ள கடிதங்கள் மூலம் முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரே நாளில் சுமார் ரூ. 200 கோடி குவிந்துள்ளது. தொடர்ந்து நிதி அளித்து வருகிறார்கள். நிதி உதவி அளிப்பவர்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்0 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்
23 Apr 2024சென்னை, பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
23 Apr 2024ஐதராபாத், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டின் எல்லையில் சோதனை மேலும் தீவிரம்
23 Apr 2024சென்னை, கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் எல்லைப்பகுதிகளில் மேலும் சோதனையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் சென்னை ஏரிகளில் நீர் இருப்பு பாதியாக சரிவு
23 Apr 2024சென்னை, கோடைகாலம் தொடங்கிய நிலையில், சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு 60 சதவீதமாக சரிந்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.