எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், ஜன.12 - திண்டுக்கல்லில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டதையடுத்து பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. நகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் அலங்கார்தட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி பாண்டியன்(54). இவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆவார். இவரது வீடு திண்டுக்கல் அருகிலுள்ள நந்தவனப்பட்டியில் உள்ளது. இங்கு தனது தாயார் வேலம்மாள், மகள் சந்தனபிரியா(14), மகன் சந்தோஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் கடந்த 2006ம் வருடம் ஏப்ரல் 6ம் தேதி தூத்தூக்குடி அருகே படுகொலை செய்யப்பட்டார். பசுபதி பாண்டியன் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் தனது வீட்டுமுன்புறம் அமர்ந்து செல்போன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென வந்த 3 பேர் கொண்ட மர்மக் கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் மாவட்ட எஸ்.பி. தலைமையில் போலீசார் நேரில் சென்று பிணத்தைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. மோப்ப நாய் ஊருக்கு அருகிலுள்ள கள்ளிப்பட்டி வரை சென்று விட்டு அங்கேயே நின்று விட்டது. இதனிடையே பசுபதி பாண்டியன் படுகொலை சம்பவம் காட்டுத்தீ போல் நகரெங்கும் பரவியது. வியாபாரிகளும், கடைக்காரர்களும் தங்களின் கடைகளை அடைத்து விட்டு அவசர அவசரமாக வீடு திரும்பினர். நகருக்குள் வந்து கொண்டிருந்த பேருந்துகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நிலக்கோட்டை அருகே பேருந்தின் மீது கல்வீசி தாக்கி கண்டக்டரிடம் பணப்பையைப் பறிக்க முயன்ற 2 பேரை டி.எஸ்.பி. புஷ்பம் தலைமையில் போலீசார் விரட்டி சென்று பிடித்து அவர்களை கைது செய்தனர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்ததுடன் டிரைவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்றுக்காலை 9 மணியளவில் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் புடைசூழ ஆம்புலன்சில் இருந்து வாகனங்கள் பின்தொடர்ந்து வர அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முன்னே மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், காவல்துறையினர் பாதுகாப்புடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்றது. அங்குவிலாஸ் இறக்கம், சவரியார் பாளையம், தோமையார்புரம் வழியாக மதுரை நோக்கி சென்றது. வழியெங்கிலும் அவருக்கு பொதுமக்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். முருகன்பட்டி என்ற இடத்தில் சென்ற போது 5000க்கும் மேற்பட்டோர் கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இச்சம்பவத்தால் திண்டுக்கல் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பேருந்துகளும் இயங்காததால் நகரே வெறிச்சோடிக் காணப்பட்டது.
கொன்றது கூலிப்படையா?
பசுபதி பாண்டியன் நந்தவனப்பட்டியில் உள்ள தனது வீட்டில் எப்போதும் ஆதரவாளர்கள் 15 பேர்களுடன் தான் இருப்பார். நேற்றுமுன்தினம் தேனியில் முல்லை பெரியாறு பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்து விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். ஆதரவாளர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டதால் அவர்களை சாப்பிட போக சொல்லி விட்டு போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அந்நேரம் மறைந்திருந்து சட்டை அணியாமல் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர் மீது பாய்ந்தனர். அவர் சுதாரிப்பதற்குள் சரமாரியாக வெட்டி விட்டு ஓடி விட்டனர். உடலில 13 இடங்களில் வெட்டு இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு பல வழிகளில் எதிரிகள் இருப்பதால் கூலிப்படையை வைத்து இக்கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இக்கொலை தொடர்பாக மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ்ஈடுபட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.