முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் கட்சி நிர்வாகிகள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டி ஆசி

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.12 - அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி பேரன் பிரசன் பிரபாகரின் பெண் குழந்தைக்கு முதல்வர் ஜெயலலிதா `நிரஞ்சனா' என பெயர் சூட்டி உச்சி மோந்து ஆசி வழங்கினார்.  இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா, நேற்று (11.1.2012  புதன் கிழமை), அ.தி.மு.க. மருத்துவ அணி துணைச் செயலாளரும், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர்- வி. ரம்யா ஆகியோருடைய பெண் குழந்தைக்கு விஜயா என்றும், பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளரும், பெரம்பலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்- தேவ பிரியதர்ஷினி ஆகியோருடைய பெண் குழந்தைக்கு ரஞ்சனி என்றும், ஆர். ராஜசேகரன்-​ ஆர். கவிதா ஆகியோருடைய ஆண் குழந்தைக்கு நிரஞ்சன் என்றும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்  சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியின் பேரன் பிரசன் பிரபாகர்-  ப்ரீத்தி ஆகியோருடைய பெண் குழந்தைக்கு நிரஞ்சனா என்றும் பெயர் சூட்டி, குழந்தைகளின் உச்சி மோந்து ஆசி வழங்கினார். இந்நிகழ்வுகளின் போது அவரவர் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்