முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகிகள் 3 பேர் மறைவு: முதல்வர் இரங்கல்

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.12 - ராமநாதபுரம், திண்டுக்கல், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்ட மீனவர் பிரிவு துணைத் செயலாளர் ஆர்.சுப்பையா, திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு பேரூராட்சி அ.தி.மு.க. ஆர்.பி.பரமசிவம், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம், முனியூர் ஊராட்சி மன்றத் தலைவர் காவேரி ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். 

சுப்பையா, பரமசிவம் மற்றும் காவேரி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்