முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்-இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜன.13 - மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மும்பையில் இருந்து 117 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் ஏர் இந்தியா விமானக் கம்பெனிக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ-319 விமானம் டெல்லி புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி தகவல் ஒன்று கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தை தரையிறக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் அதற்கு முன் விமானம் டெல்லி சென்றுவிட்டது. இதையடுத்து அந்த விமானம் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. உடனடியாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதையடுத்து அந்த விமானம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களால் சோதனையிடப்பட்டது. ஆனால் விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. பொய்யான தகவலால் மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களிலும் பயணிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பு அச்சமும் ஏற்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்