முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரஞ்சீவியின் செல்வாக்கு குறைந்துவிட்டது: சந்திரபாபு நாயுடு

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

நகரி,ஜன.13 - காங்கிரஸில் சேர்ந்ததால் நடிகர் சிரஞ்சீவியின் செல்வாக்கு குறைந்துவிட்டது என்று தெலுங்குதேசம் கட்சித்தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு செல்கிறார். தெலுங்குதேசம் கட்சித்தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

ஆந்திராவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி மூழ்கிய படகு போல் மாறிவிட்டது. இனி அந்த கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. இப்படிப்பட்ட கட்சியில் நடிகர் சிரஞ்சீவி சேர்ந்ததுதவறு. அக்கட்சியில் சேர்ந்ததால் அவரது செல்வாக்கு குறைந்து விட்டது. அவர் அரசியலுக்கு வராமல் சினிமாவில் இருந்திருந்தால் பெயரையும், புகழையும் தக்கவைத்திருக்கலாம்.  தற்போது தான் உருவாக்கிய கட்சியை கலைத்து விட்டு பதவிக்காக காங்கிரஸ் தலைவர்களை கெஞ்சி வருகிறார். இதனால் ஆந்திர மக்களுக்கு அவர் மீது இருந்த நன்மதிப்பு குறைந்துவிட்டது. ஜெகன்மோகன் ரெட்டி மீது சி.பி.ஐ.அதிகாரிகள் சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இவ்வழக்கில் அவர் ஜெயிலுக்குப்போவது உறுதி இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்