எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன, 13 - தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலையும், இணை ஆசிரியர் காமராஜையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க மருத்துவ அணி காவல் துறையை வலியுறுத்தியுள்ளது. சென்னையில் அ.தி.மு.க தலைமையகத்தில் அ.தி.மு.க மருத்துவ அணியின் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மருத்துவ அணியின் மாநில தலைவர் டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தலைமை வகித்தார். மாநில செயலாளர் டாக்டர் வேணுகோபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய், கைத்தறித்துறை அமைச்சர் சுந்தரராஜ் கலந்து கொண்டார்.
மேலும் அமைப்பு சாரா ஓட்டுனர்கள் சங்க மாநில செயலாளர் கமலக் கண்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற மாநில செயலாளர் தமிழ்மகன் உசேன், விவசாயிகள் பிரிவு செயலாளர் துறை; கோவிந்தராஜன், சுலோசனா சம்பத் ஆகியோரும் பங்கேற்றனர்.
மேலும் டாக்டர் விஜய் பாஸ்கர், டாக்டர் சரோஜா மற்றும் மாவட்ட மருத்துவ அணியின் செயலாளர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கீழ்கண்டத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் விபரம் வருமாறு:-
தீர்மானம்: 1
2011 சட்டமன்ற பொதுத் தேர்தலில், விஞ்ஞான ஊழலின் ஊற்றுக்கண், ஸ்பெக்டரம் ஊழலுக்கு அஸ்திவாரமாக இருந்த கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்டத்தை நிறுத்தி, என்றும் தமிழக மக்களுக்கு நன்மை செய்யும், தமிழ் நாட்டிற்கு ஏற்படும் எந்தொரு பிரச்சனையாக இருந்தாலும் முதலில் குரல் கொடுக்கும் ஜெயலலிதா அவர்களை, தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் அமர்த்திய தமிழக மக்களை, அ.தி.மு.க. மருத்துவ அணி, தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி அளவில், கழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியினை தந்த, தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு முறை கழக மருத்துவ அணி தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்: 2
தமிழகத்தை ஆண்ட மைனாரிட்டி தி.மு.க அரசு, புதிய தலைமைச் செயலகம், என்ற பெயரில் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவழித்து, அறைகுறையாக, பாதுகாப்பின்றி கட்டி முடித்த கட்டிடத்தை, தமிழக முதலமைச்சரை தமிழக முதல்வராக பொறுப்பேற்ற உடன், பாதுகாப்பின்றி இருக்கும் கட்டிடத்தை பாதுகாப்புடன் கட்டி முடிக்கவும், அதற்கு மேல் அனைவரும் பயனளிக்கும் வகையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக, புதிய மருத்துவமனையாக மாற்றி அமைத்து, என்றும் மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று அனைவருக்கும் உணர்த்தி காட்டிய, தமிழக முதல்வரை அ.தி.மு.க. மருத்துவ அணி நன்றி தெரிவித்து, பாராட்டி வணங்குகிறது.
தீர்மானம்: 3
தமிழகத்தின் தென் மாவட்டத்தின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, எவ்வித வற்புறுத்தலுக்கும் அடி பணியாமல், உச்ச நீதி மன்றம் மட்டும்தான் தமிழகத்திற்கு நியாயமான தீர்ப்பை வழங்கும் என்று முடிவெடுத்த, தமிழக முதல்வருக்கு அ.தி.மு.க மருத்துவ அணி தனது நன்றி தெரிவித்து வணங்குகிறது.
தீர்மானம்: 4
`தானே' புயல் தமிழகத்தை தாக்குவதற்கு முன்பே, சீரிய முனைப்புடன் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த தமிழக முதல்வருக்கு அ.தி.மு.க. மருத்துவ அணி, தனது மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கிறது.
`தானே' புயலால் அதிகம் பாதிப்பிற்குள்ளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ரூபாய் 850 கோடி நிவாரணத் தொகை அளித்து, நேரில் சென்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களின் கண்ணீரை துடைத்த தாய் உள்ளம் கொண்ட தமிழக முதலமைச்சரை, அ.தி.மு.க. மருத்துவ அணி வாழ்த்துகிறது.
தீர்மானம்: 5
முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் உள்ள ஏழை-எளிய மக்களின் உயிர் காக்கும் உன்னத நோக்கோடு, தாயுள்ளத்தோடு, வழங்கியுள்ள திட்டம்தான், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம். வரலாற்று சிறப்பு மிக்க விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்கிய முதல்வருக்கு அ.தி.மு.க. மருத்துவ அணி நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
அதிலும் குறிப்பாக, ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 1 லட்சம் வீதம், 4 வருடங்களுக்கு ரூபாய் 4 லட்சம் வழங்குவதற்குண்டான வழி வகையும், குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூபாய் 1,50,000 லட்சம் வரை வழங்கிடவும்,
மொத்தம் 1016 சிகிச்சை முறைகளும், 113 தொடர் சிகிச்சை வழி முறைகளும், 23 நோய் அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கு வழி வகைகளும், செய்ததோடு, பயனாளிக்கும் புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கி, 1 கோடியே 34 லட்சம் குடும்பங்கள் பயன்படக்கூடிய உன்னத திட்டத்தை தந்த, தமிழக முதல்வருக்கு அ.தி.மு.க. மருத்துவ அணி நன்றியை காணிக்கையாக்குகிறது.
தீர்மானம்: 6
கழகத்தின் நிரத்தரப் பொதுச் செயலாளர், தமிழக முதலமைச்சர்ஜெயலலிதா தலைமையில், தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட்ட நாள் முதல், தீயசக்தி கருணாநிதியின் தூண்டுதலின்பேரில், பத்திரிக்கை சுதந்திரம் என்கின்ற பதத்தை தவறாக பயன்படுத்தி, பொய் செய்திகளையும், அவதூறு செய்திகளையும் வெளியிடும், மஞ்சள் பத்திரிக்கை நக்கீரனின் ஆசிரியர் மற்றும் இணை ஆசிரியர் ஆகியோரை உடனடியாக கைது செய்யவும், அந்த பத்திரிக்கையை தடைசெய்யவும் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, காவல் துறையை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.