முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ஐகோர்ட்டு சுப்பிரமணிய சாமிக்கு முன்ஜாமீன்

சனிக்கிழமை, 14 ஜனவரி 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஜன.13 - டெல்லி போலீசார் தொடர்ந்த வழக்கில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமிக்கு டெல்லி ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.  கடந்தாண்டு ஜூலை மாதம் ஒரு பத்திரிகை ஒன்றில் டாக்டர் சுப்பிரமணிசாமி எழுதிய கட்டுரை ஒன்று வெளிவந்தது. இந்த கட்டுரையானது இரு சமூகத்தினர்களுக்கிடையே மோதல் போக்கை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியது என்று கூறி கடந்தாண்டு அக்டோபர் மாதம் டெல்லி போலீசார், சுப்பிரமணியசாமி மீது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனையொட்டி தாம் கைது செய்யப்படலாம் என்றும் அதனால் தமக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் அவர் சார்பாக வழக்கறிஞைர் மஹூன் பிரதான் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதி எம்.எல்.மேத்தா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியசாமி மீது முதல் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் வழக்கறிஞர் மஹூன் பிரதான் அடியோடு மறுத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மேத்தா, சுப்பிரமணியசாமிக்கு முன்ஜாமீன் வழங்கி தீர்ப்பு ளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்