முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

ரட்லம், ஜன. 15 - மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் மாவட்டத்தில் ஜாவோரா நகரில் உள்ள உசேன்தெக்ரி என்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனை ஒன்று நடத்தப்பட்டது. அப்போது அதிக அளவில் மக்கள் திரண்டு வந்தனர். இந்த வழிபாட்டு தலத்தின் நுழைவு வாயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் அதே இடத்தில் மரணமடைந்தார்கள். மேலும் பலர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 12 பேர் பலியானார்கள்.மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் அந்த நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்