எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, ஜன. - 14 - புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் ஸ்ரீசுமதி அறக்கட்டளை மற்றும் மனித நேய மக்கள் சேவை இயக்கம் இணைந்து ஸ்ரீசுமதி பாலவித்யாலையாவின் 5ம் ஆண்டு விழா மற்றும் உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட 10 மற்றும் பிளஸ்2 மாணவமாணவியருக்கான பரிசளிப்பு விழா கோவிந்த சாலை பள்ளிவாசல் அருகில் இன்று நடைபெற்றது. நேரு எம்.எல்.ஏ, தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது: தானே புயல் பாதிப்பை பார்த்தபோது மின்சாரம் 10 நாளிலாவது கிடைக்குமா? என்று தோன்றியது. ஆனால் மின்துறை ஊழியர்களுடன், அனைத்து மக்களும் ஒத்துழைப்பு கொடுத்ததன் காரணமாக ஒரே நாளில் நகரப் பகுதிக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டது. அந்த வேகத்தை பார்த்து தான் பொங்கலுக்குள் மின்சாரம் எல்லா பகுதிக்கும் கொடுக்கப்படும் என்று அறிவித்தேன். அதன்படி மின் துறை ஊழியர்கள் இன்றும் பல்வேறு கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்து வருகின்றனர். பொங்கலுக்குள் கொடுக்கும் வகையில் பணிகள் நடந்து கொண்டுள்ளது. நேரு எம்.எல்.ஏ. மனித நேய மக்கள் இயக்கம் தொடங்கி மக்கள் பாராட்டக்கூடிய நிலையில் செயல்பட்டு வருகின்றார். மக்களுக்கு சேவை செய்பவர்கள் அரசு அங்கீகாரம் கிடைத்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று நினைப்பார்கள். மக்களிடம் யார், யார் நெருக்கமாக உள்ளார்களோ அவர்களுக்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள். திடீரென கட்சி ஆரம்பித்து, எம்.எல்.ஏ.வாக தேர்வாகி விட முடியாது. நேரு சிறப்பாக பணியாற்றினார் என்பது தான் உண்மை. அவரின் பணியை பார்த்து நானே எம்.எல்.ஏ.வாக வர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளேன். இருப்பினும் அதற்கெல்லாம் ஒரு நேரம் வர வேண்டும். தற்போது நேரம் வந்ததால் தான், மக்கள் அவருக்கு எம்.எல்.ஏ.வாக அங்கீகாரம் அளித்துள்ளனர். என்.ஆர்.காங்கிரஸ் தொடங்கி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றவர்கள் யாரும் சோடை போகவில்லை. புயலின்போது அனைவரும் தங்கள் தொகுதிகளை விட்டு வெளியே வராமல் பணி செய்துள்ளனர். இதனால் எனக்கு திருப்தி ஏற்பட்டது. சுகாதாரத்துறை சார்பில் அதிக ரத்ததான வழங்கியவர்களுக்கான விருதை மனித நேய மக்கள் சேவை இயக்கம் பெற்றது. அது போன்று தனது இயக்க நண்பர்களை நேரு தயார் செய்துள்ளார். எம்.எல்.ஏ.வாக வருவது சுலபம் கிடையாது. மக்கள் மனதில் நன்றாக சேவை செய்வார் என்ற எண்ணம் வர வேண்டும். மனிதனாக பிறந்த அனைவரும் பிறருக்கு உதவ வேண்டும். குறைந்தது தொந்தரவு அளிக்காமலாவது இருக்க வேண்டும். புதுச்சேரியில் நல்ல கல்வி கொடுக்கப்படுகின்றது என்பதில் ஐய்யம் இல்லை. நேரு பொது தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குவது போல், நானும் எம்.எல்.ஏ. ஆனது முதல் பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கி வருகின்றேன். அதனால் அப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அனைவருக்கும் கல்வி கொடுப்பது மட்டுமின்றி, தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்பதும்தான் அரசின் எண்ணம். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றது. மக்கள் ஒரே ஒரு குறையாக உள்ள அரிசியை மட்டும் மாற்றி கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். மத்திய அரசு கொடுக்கும் விலையிலேயே ஒற்றை அவியல் அரிசியை வழங்க வேண்டும் என்பது தான் எண்ணம். தற்போது அரிசி ஆலை அதிபர்கள் மத்திய அரசின் தரும் விலைக்கே ஒற்றை அவியல் அரிசியை தர ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே விரைவில் ஒற்றை அவியல் அரிசி மக்களுக்கு கிடைக்கும். தேவையானவர்களுக்கு, தேவையான உதவியை தேவைப்படும் காலத்தில் சரியாக இந்த அரசு செய்து கொடுக்கும். புதுச்சேரி மற்றும் கோவாவில் மட்டுமே கலப்படமின்றி பால் கொடுக்கப்படுவதாக ஒரு சர்வேயில் கூறினர். அதுபோல் அனைத்து துறையிலும் புதுச்சேரி உதாரணமாக திகழ அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.