முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வைர கிரீடம் நன்கொடை

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஜன.20 - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ரூ.1 1/2 கோடி மதிப்பிலான வைரகிரீடத்தை மதுரை தொழில் அதிபர் வழங்கினார். மதுரையை சேர்ந்தவர் சுப்பையா, தொழில்அதிபர். இவரது மனைவி சரோஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ரூ 1/2 கோடி மதிப்பிலான வைர கிரீடத்தை இவர்கள் உபயமாக வழங்கினர்.  வைர கிரீடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்றுகாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. வைர கிரீடத்தில் 300 காரட் மதிப்பில் 11/2 கிலோ எடையுள்ள பச்சை மற்றும் சிவப்பு நிற வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி ஜெயராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த வைர கிரீடம் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் போது அம்மனுக்கு சாத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்