முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு: நடிகர் வடிவேல் ஆஜர்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

நத்தம், ஜன.- 19 - தேர்தல் விதமுறை மீறல் தொடர்பான வழக்கில் நடிகர் வடிவேல் நேற்று நத்தம் நீதிமன்றத்தில் ஆஜரானார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் க.விஜயனை ஆதரித்து கடந்த 6.4.2011ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். நத்தம் பேருந்து நிலையத்தில் தனது பிரச்சாரத்தின் போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், தேர்தல் ஆணைய உத்தரவை மீறி அதிக அளவு வாகனங்களில் வந்ததாகவும் சண்முகம் என்பவர் நத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் நடிகர் வடிவேல் மற்றும் தி.மு.க. வேட்பாளர் விஜயன் மீது 143, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு நத்தம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு விசாரணைக்காக நேற்று நடிகர் வடிவேல் மற்றும் தி.மு.க. வேட்பாளர் விஜயன் ஆகியோர் ஆஜரானார்கள். நீதிபதி ஆனந்தன் இவ்வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த நடிகர் வடிவேலுவிடம் நிருபர்கள் வழக்கு குறித்து கேட்டதற்கு, பதில் எதுவும் கூற மறுத்து விட்டார். தற்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சி குறித்து கேட்டதற்கும் பதிலளிக்க வில்லை. கேட்ட கேள்விகள் எதற்கும் பதிலளிக்காத வடிவேல், தான் கதாநாயகான நடித்துக் கொண்டிருக்கும் படம் விரைவில் திரைக்கு வரப்போவதாகவும் அதைப்பார்த்து நன்றாக ரசிக்கவும் என்று கூறி விட்டு சென்று விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்