முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் கடும் பனிமூட்டம் 70 விமானங்கள் தாமதம்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜன. - 21 - தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்கு தாங்க முடியாத அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. டெல்லியில் கடந்த 2 தினங்களாக பனி மூட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளது. அடர்த்தியான புகை போல பனி சூழ்ந்துள்ளது. நேற்று 3 வது நாளாக பனி மூட்டம் அதிகமாக இருந்தது. 50 மீட்டர் தூரத்துக்கு எதுவும் தெரியாத அளவுக்கு பனிப்புகை காணப்பட்டது. நேற்று அதிகாலை டெல்லியில் சீதோஷ்ண நிலை 4.5 டிகிரி செல்சியசாக இருந்தது. இதனால் குளிர் காற்று வீசியது. நேற்று காலை நீண்ட நேரத்துக்கு பிறகே சூரிய வெளிச்சம் வந்தது. சாலைகள் தெரியாத அளவுக்கு பனி மூடியிருந்ததால் பஸ், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. நேற்று டெல்லியில் இயக்க வேண்டிய சுமார் 30 ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. அதே போல புறப்பட வேண்டியதிருந்த 70 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. வட மாநிலங்களில் நிலவும் இந்த பனி மூட்டம் வரும் மார்ச் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பனி மூட்டத்தால் டெல்லியில் இருந்தும், காஷ்மீரில் இருந்தும் சிலர் வெளியேறி உள்ளனர். இந்த குளிர் காரணமாக 5 மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்