முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாவூத் இப்ராகிம் குறி வைக்கும் நிலக்கரி கனிம சுரங்கங்கள்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

மும்பை, ஜன. - 21 - வட மாநிலங்களில் உள்ள நிலக்கரி கனிம சுரங்கங்களை மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் குறி வைத்துள்ளார். இதற்கு மாவோயிஸ்டுகள் உதவி செய்கிறார்கள். நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தான் நகரில் உள்ள கராச்சியில் வசித்து வருகிறார். இவர் பல்வேறு நிறுவனங்கள் மூலம் பல்லாயிரம் கோடி பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து சட்டவிரோதமாக சம்பாதித்து வருகிறார். அவனது நிறுவனங்களில் ஜூபீடர் பைனான்ஸ், நியூ ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகியவை மட்டும்தான் வெளியில் தெரிந்துள்ளன. இந்த நிறுவனங்கள் மூலமாக வட இந்தியாவில் சுரங்க தொழிலில் ஈடுபட கடந்த ஆண்டு தாவூத் இப்ராகிம் முயற்சி செய்தான். அதை உளவுத் துறையினர் முறியடித்து விட்டனர்.
இதையடுத்து வேறு போலி பெயர்களில் சட்டவிரோத சுரங்க தொழிலில் ஈடுபட அவன் முயற்சி செய்து வருகிறான். குறிப்பாக ஜார்கண்டு, சத்தீஸ்கர், ஒரிசா, பீகார் முதலிய மாநிலங்களில் உள்ள நிலக்கரி மற்றும் கனிம சுரங்கங்களை அவன் குறி வைத்துள்ளான். இதற்காக அவன் மாவோயிஸ்டுகள் உதவியை நாடி உள்ளான். சமீப காலமாக பலத்த பின்னடைவை சந்தித்துள்ள மாவோயிஸ்டுகளுக்கு பணமும், ஆயுதங்களும் தற்போது தேவைப்படுகிறது. அதனால் அவர்கள் தாவூத்துக்கு உதவ முன்வந்துள்ளனர். தாவூத் இப்ராகிமும், மாவோயிஸ்டுகளும் கைகோர்த்து இருப்பது மத்திய உளவுத் துறைக்கு கடும் எச்சரிக்கையாக உள்ளது. அவர்கள் சட்டவிரோத சுரங்க தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பதோடு மட்டும் நிற்க மாட்டார்கள். கூட்டாக நாச வேலைகளிலும் ஈடுபட கூடும் என்று கருதப்படுகிறது. எதிர்காலத்தில் அவர்களது கூட்டணி இந்தியாவுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க கூடும் என்று உளவுத் துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே தாவூத் இப்ராகிமின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உளவுத் துறை திட்டமிட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்